காட்டுக்குள் மோசமான நிலையில் கிடந்த சிறுமிகள்.!! கொடூரமான முறையில் பலாத்காரம் .!!

காட்டுக்குள் மோசமான நிலையில் கிடந்த சிறுமிகள்.!! கொடூரமான முறையில் பலாத்காரம் .!!



2 Girls raped in assam fores t

அசாம்: ஹைலகண்டி என்னும் மாவட்டத்தில் உள்ள பர்னீ பிரீஸ் தேயிலை தோட்ட என்ற பகுதியில் வசித்து வரும் 2  மைனர் சிறுமிகள் ஒன்றாக அங்குள்ள பள்ளிக்கு சென்று வருவது வழக்கம். அதே போல் தான் கடந்த செவ்வாய் கிழமை  அன்று இருவரும் பள்ளிக்கு சென்று கொண்டிருந்த போது, 2 பேர் அவர்களை பின்தொடர்ந்து வருவதை அறிந்துள்ளனர். பின்னர் நொடியில், 2 சிறுமிகளையும் கடத்தி, அங்குள்ள காட்டு பகுதிக்கு தூக்கி சென்றனர். 

பின்னர், மோகனப்பூர் பகுதியில் உள்ள அடர்வன காட்டு பகுதியை அடைந்தவுடன் 2 சிறுமிகளையும் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனைத்தொடர்ந்து, பள்ளி முடிந்து இருவரும் வீடு திரும்பாத நிலையில், சிறுமிகளில் ஒருவரின் தந்தை, காவல்துறையில் புகார் அளித்து உள்ளார். இதுகுறித்து, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

இந்த விசாரணையில் காட்டுக்குள் 2 சிறுமிகளும் மிகவும் மோசமான நிலையில் கிடந்து உள்ளனர். உடனே அவர்களை மீட்டு சில்சார் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இதில், ஒரு சிறுமி மட்டும் சிகிச்சை பலனின்றி கடந்த புதன் கிழமை அன்று உயிரிழந்து விட்டார். பின்னர், இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடந்து வருகிறது.