பாவி மனுஷங்களா நம்பி வந்த என்னைய இப்படி பண்ணிட்டீங்களே டா... மது கொடுத்து நர்சிங் மாணவியை கூட்டு பலாத்காரம் செய்த நண்பர்கள்!!

பாவி மனுஷங்களா நம்பி வந்த என்னைய இப்படி பண்ணிட்டீங்களே டா... மது கொடுத்து நர்சிங் மாணவியை கூட்டு பலாத்காரம் செய்த நண்பர்கள்!!



 2 friends raped by nursing girl in Kerala

கேரளா மாநிலம் எர்ணாகுளம் பகுதியை சேர்ந்த நர்சிங் மாணவி ஒருவருக்கு அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு நட்பாக பழகி வந்துள்ளனர். அந்த வாலிபரின் நண்பரும் மாணவியுடன் நெருங்கி பழகியதை அடுத்து இரண்டு ஆண் நண்பர்களும் மாணவியுடன் அடிக்கடி பேசி பழகி வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த 18 ஆம் தேதி மாணவியை தனது வீட்டிற்கு அழைத்து சிறிது நேரம் பேசி விட்டு வந்து விடலாம் என வாலிபர் அழைத்துள்ளார். மாணவியும் நண்பன் தானே என்று நம்பி அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு அந்த வாலிபரின் நண்பரான மற்றொரு ஆண் நண்பரும் இருந்துள்ளார். சிறிது நேரம் பேசிய பிறகு வாலிபர் மது குடிக்க துவங்கியுள்ளார். மாணவியையும் மது குடிக்க வற்புறுத்தி உள்ளார். முதலில் மறுப்பு தெரிவித்த மாணவி பின்னர் மதுவை குடித்து போதையாகியுள்ளார். 

KERALA

போதையில் இருந்த மாணவியை இரண்டு நண்பர்களும் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அதில் மாணவிக்கு உடல் நிலை சரியில்லாமல் போகவே மாணவியை மறுநாள் காலை எர்ணாகுளம் பஸ் நிலையத்தில் விட்டு விட்டு இருவரும் தப்பி ஓடியுள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு புகார் தெரிவிக்கவே போலீசார் தலைமறைவான இரண்டு நபர்களையும் தேடி கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.