திடீரென மாயமான 2 ½ வயது குழந்தை! நேர்ந்த துடிக்கவைக்கும் விபரீதம்! கதறிய பெற்றோர்!!

திடீரென மாயமான 2 ½ வயது குழந்தை! நேர்ந்த துடிக்கவைக்கும் விபரீதம்! கதறிய பெற்றோர்!!



2-and-half-year-baby-dead-by-falling-into-borewell

கர்நாடகா பெலகாவி மாவட்டம் ஆலக்கனூர் கிராமத்தைச்  சேர்ந்தவர் சித்தப்பா ஹசாரே. இவரது இரண்டரை வயது மகன் சரத். அவர்கள் குடும்பத்துடன் தோட்டத்து வீட்டில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த குழந்தை திடீரென மாயமானது. 

இதனால் பதறிப்போன சித்தப்பா ஹசாரே மற்றும் அவரது குடும்பத்தினர் குழந்தை சரத்தை அக்கம்பக்கம் முழுவதும் தேடியுள்ளனர். ஆனால் எங்கு தேடியும் குழந்தை கிடைக்காத நிலையில் குழந்தையை காணவில்லை என அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து போலீசாரும் குழந்தை சரத்தை தேடியுள்ளனர்.

இந்நிலையில் குழந்தை அருகிலிருந்த ஆழ்துளை கிணற்றில் 7 அடி ஆழத்தில் விழுந்தது தெரியவந்துள்ளது. இதனைக் கேட்டு குழந்தையின் பெற்றோர்கள் கதறி அழுதுள்ளனர். அதனைத் தொடர்ந்து போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் அவ்விடத்திற்கு விரைந்து குழந்தையை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். மேலும் குழந்தை விழுந்து 24 மணி நேரத்திற்கும் மேலான நிலையில் ஆக்ஸிஜன் கிடைக்காமல், உணவின்றி பேச்சு மூச்சில்லாமல் இருந்துள்ளது.

அதனை தொடர்ந்து நேற்று இரவு குழந்தை சரத் இறந்து விட்டதாக போலீசார் கூறியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் குழந்தையின் சடலத்தை எடுக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றது.