15 வயது சிறுமியை கதறக்கதற கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த பயங்கரம்..! ஆள் நடமாட்டமில்லாத பகுதியில் நடந்தது என்ன?..! பேரதிர்ச்சி சம்பவம்..!!
மத்தியபிரதேச மாநிலத்தில் உள்ள கார்ஹொன் மாவட்டம் நிமர் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 8-ஆம் வகுப்பு பயிலும் மாணவி, கடந்த வியாழக்கிழமையன்று தனது ஆண் நண்பருடன் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது இருவரையும் அதே பகுதியை சேர்ந்த 2பேர் பின் தொடர்ந்து சென்றுள்ளனர். இந்த நிலையில், ஆள் நடமாட்டமில்லாத பகுதியில் இருவரும் சென்றதை தொடர்ந்து, பின் தொடர்ந்த இரு நபர்களுடன், சிறுமியின் ஆண் நண்பரும் இணைந்து சிறுமியை மறைவான இடத்திற்கு தூக்கி சென்றுள்ளனர்.
இதனால் சிறுமி அலறவே, மூவரும் கதற கதற கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின் சிறுமையை அவரது வீட்டருகே விட்டுவிட்டு தப்பி சென்றுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி தனது பெற்றோரிடம் தனக்கு நடந்த கொடூரம் குறித்து தெரிவிக்கவே, அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர்.
இந்த புகாரை ஏற்ற காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த மூவரையும் கைது செய்துள்ளனர். அத்துடன் இதுகுறித்து சமூக நலஆர்வலர்கள், தற்போதைய காலகட்டத்தில் பெண்கள் மீதான வன்முறை அதிகரித்துவிட்டதாகவும், அதனை சரிசெய்ய அரசு ஏதேனும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.