தலைநகரையே உலுக்கிய கொடூரம்! 12 வயது சிறுமிக்கு நேர்ந்த பாலியல் பயங்கரம்! சிறுமியின் தற்போதைய நிலை என்ன?

தலைநகரையே உலுக்கிய கொடூரம்! 12 வயது சிறுமிக்கு நேர்ந்த பாலியல் பயங்கரம்! சிறுமியின் தற்போதைய நிலை என்ன?


12-year-child-sexually-abused-in-delhi

டெல்லி புறநகரான பாசிம் விஹாரின் பீரா காரி பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, வீட்டில் தனியாக இருந்த 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கத்தரிக்கோலால் பலமுறை குத்தப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். 

இந்நிலையில் உயிருக்கு போராடிய நிலையில் சிறுமி டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் சிறுமியின் தனிப்பட்ட பாகங்கள் மற்றும் குடல்களில் கடுமையான காயம் ஏற்பட்டுள்ளதாகவும், சிறுமியின் தலை மற்றும் இடுப்பில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

delhi

இந்நிலையில் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணைக்கு பிறகு நேற்று நபர் ஒருவரை  கைது செய்துள்ளனர். மதுபோதைக்கு அடிமையான இவர் மீது ஏற்கனவே பல கிரிமினல் வழக்குகள் உள்ளது. மேலும் பலமுறை சிறைக்குச் சென்ற அவர் சமீபத்தில்தான் ஜாமீனில் வெளியே வந்துள்ளார் எனவும் போலீசார் கூறியுள்ளனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.