நேற்று ஒரே நாளில் 138 ரயில்கள் ரத்து!,, முன்பதிவு செய்த பயணிகள் கடும் அவதி!..ரயில்வே துறையில் என்ன நடக்கிறது..?!

நேற்று ஒரே நாளில் 138 ரயில்கள் ரத்து!,, முன்பதிவு செய்த பயணிகள் கடும் அவதி!..ரயில்வே துறையில் என்ன நடக்கிறது..?!



103-trains-were-completely-canceled-across-the-country

இந்தியா முழுவதும் சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக பல்வேறு இடங்களில் ரயில் தண்டவாளங்கள் பாதிக்கப்பட்டு இருந்தன. மேலும் ரயில்வே சிக்னல்களில் கோளாறுகளும் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இவை அனைத்தையும் சரி செய்ய பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள ரயில்வே நிர்வாகம் முடிவு செய்தது.

இந்த நிலையில், நேற்று இந்த பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதன் காரணமாக நாடு முழுவதும் நேற்று 103 ரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், பகுதிநேர அளவில் 35 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. தர்பங்கா எக்ஸ்பிரஸ், டார்ஜிலிங் எக்ஸ்பிரஸ், சோலாப்பூர் எக்ஸ்பிரஸ், ராய்ப்பூர் எக்ஸ்பிரஸ், நெல்லூர்-சூலூர்பேட்டை மற்றும் சூலூர்பேட்டை-சென்னை எக்ஸ்பிரஸ் ரயில்கள் முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டன.

சென்னை-விஜயவாடா எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட 35 ரயில்கள் பகுதி நேர அளவில் ரத்து செய்யப்பட்டன. பராமரிப்பு பணி காரணமாக, பல ரயில்களின் நேரம் மாற்றி அமைக்கப்பட்டது. ரயில்வே நிர்வாகம் மேற்கொண்ட இந்த நடவடிக்கைகளால் நேற்று பயணம் செய்ய முன்பதிவு செய்த பயணிகள், பெரிதும் அவதியுற்றனர். ஏற்கனவே முன்பதிவு செய்த டிக்கெட்டுகளை ரத்துசெய்ய முடியாமலும் சிரமப்பட்டனர்.