Couple's Corner: கருத்தடை என்றால் என்ன?.. எந்த கருத்தடை பாதுகாப்பானது?.. முழு விபரம் உள்ளே.!

Couple's Corner: கருத்தடை என்றால் என்ன?.. எந்த கருத்தடை பாதுகாப்பானது?.. முழு விபரம் உள்ளே.!


what-is-contraception-which-one-is-safe-details-in-tami

கருவளர்ச்சியை பல காரணங்களுக்காக தள்ளிப்போட நினைக்கும் தம்பதிகள், கருத்தடை சாதனங்களை தேர்வு செய்யும் முன் ஒருகணம் யோசித்து முடிவெடுங்கள்.

மனிதராக பிறந்த ஒவ்வொருவரும் தங்களின் வாழ்நாட்களில் திருமணம் என்ற பந்தத்தை கடந்ததும், தனது துணையுடன் உடல்ரீதியாகவும்-மனரீதியாகவும் ஒன்று கூடி தங்களின் எதிர்கால வாழ்க்கையோடு, சந்ததியையும் ஒருசேர்க்க உருவாக்குகின்றனர். இது மனிதரின் ஆதி முதல் இன்று வரை தொடருகிறது. எதிர்காலத்திலும் கட்டாயம் அப்படியே நீடிக்கும். சந்ததியை உருவாக்குவதில் நாம் ஒருசில காரணத்தால் அதனை தவிர்க்கும் சூழலும் ஏற்படலாம். அது நம் நிலையை பொறுத்தது. 

இன்றளவில் கருத்தடை, குழந்தை பிறப்பை தள்ளிப்போடுதல், திருமணத்தை தள்ளிவைத்தல் என நமது சூழ்நிலைக்கேற்ப செயல்பட்டு வருகிறோம். கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு வரையில் பெரும்பாலான இந்தியர்கள் 4 முதல் 10 குழந்தைகள் வரை பெற்றுக்கொண்டனர். ஆனால், காலங்கள் மாறமாற குழந்தைகள் பிறப்பு எண்ணிக்கையும் வெகுவாக குறைந்தது. குழந்தை பிறப்பை தள்ளிப்போடவும், அதனை தவிர்க்கவும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மருத்துவ ரீதியாகவும் அதற்கான ஒத்துழைப்புகள் வழங்கப்பட்டன. அறிவியல் ரீதியாக கருத்தடை என்பது கருத்தரிப்பை தடுக்கும் முறை ஆகும். அவையாவன.,

health tips

  • கருவின் அணு - கருவின் முட்டை இணைந்து வளருகையில் கருத்தரிப்பு நிகழும். 
  • கருத்தரிப்பை தவிர உடலுறவை தவிர்க்கலாம். கருமுட்டை வளரும் காலத்தில் தம்பதிகள் உடல்ரீதியாக சேராமல் இருக்கலாம். 
  • கருமுட்டை - கரு அணுவுடன் சேராமல் தவிர்க்கலாம். தம்பதியில் யாரோ ஒருவர் கருத்தடை சாதனத்தை உபயோகம் செய்யலாம். 
  • நிரந்தர கருத்தடை சாதனம் உபயோகம் செய்யலாம். வாய்வழி மாத்திரைகள் எடுக்கலாம். 
  • கருப்பையில் ஐ.யூ.டி பொருத்தி கருவளர்ச்சியை தடுக்கலாம்.
  • உடலுறவில் உச்சக்கட்டத்தின் போது ஆணுறுப்பை பெண்ணுறுப்பில் இருந்து வெளியே எடுத்துவிடுதல் என்று பல வழிமுறைகள் இருக்கின்றன. இவற்றில் நமது உடலுக்கு-சூழலுக்கு எது உகந்தது என்பதை தம்பதிகள் முடிவு செய்துகொள்ளலாம்.

கருத்தடையில் கவனத்தில் எடுக்க வேண்டியது:

  • கருத்தடை பாதுகாப்பானதா? பக்கவிளைவு உள்ளதா? என்பதை முதலில் நன்கு கேட்டறிந்து கொள்ள வேண்டும்.
  • நீண்ட நாட்கள் கருத்தடை என்றால் அதற்கான பக்கவிளைவு என்ன என்பதை புரிந்துகொள்ளுங்கள்.
  • குறிப்பாக தாய்ப்பாலில் பக்கவிளைவை ஏற்படுத்துமா? தாய்ப்பாலில் கருத்தடை மருந்தின் குணம் இருக்குமா? என கேளுங்கள்.
  • குழந்தையின் உடல் நலத்தை பாதிக்குமா? என்பதை அறிந்திருக்க வேண்டும்.
  • கருத்தடை சந்தனத்தால் உடலுக்கு ஒவ்வாமை, தீங்கு, மாதவிடாய் பிரச்சனை ஏற்படுமா? என அறிய வேண்டும்.
  • மருத்துவருடைய உதவியுடன் பொறுத்த வேண்டுமா? சுயமாக பொறுத்தலாமா? அதன் வாழ்நாட்கள் எவ்வுளவு வருடங்கள் என்பதையும் தெரிந்திருக்க வேண்டும். 

health tips

இயற்கை கருத்தடை முறை: கருத்தடையில் இயற்கை முறை என்பது, பெண்ணுக்கு மாதவிடாய் முடிந்த 10 நாட்களுக்கு பின்னர் கருமுட்டை வளர்ச்சி அடையும் என்பதால், அந்நாட்களில் உடலுறவை தவிர்க்க வேண்டும். இது கருத்தரிப்பை தவிர்க்க பல்வகை செய்யும். ஆனால், இம்முறை சில பெண்களுக்கு மாறுபடவும் வாய்ப்புள்ளது. அதனால் கர்ப்பமாகும் வாய்ப்புகளும் ஏற்படும். பெண் தாய்ப்பால் வழங்குவதை தொடர்ந்து வந்தால், அவரால் கருத்தரிப்பை தள்ளிப்போட இயலும்.

உடலின் வெப்பம்: பெண்கள் உறங்கி எழும்போதும் அவர்கள் தூங்கிய இடத்தில் நிலவும் வெப்பத்தின் அளவை கண்காணிக்க வேண்டும். கரு வளர்ச்சியடைந்தால் உடலின் வெப்பம் 1 முதல் 2 டிகிரி பாரன்ஹீட் அதிகரிக்கலாம். 

செயற்கையான முறைகள்:

  • காண்டம்: தம்பதிகளில் ஆண் உடலுறவின் போது அணிந்துகொள்ளும் ஆணுறை, கருமுட்டையுடன் கரு அணு இணைவதை தடுக்கும். இதனால் கருத்தரிப்பு என்பது தவிர்க்கப்படும். ஆனால், ஆணுறை தரானதாக இருக்க வேண்டும். அதே நேரத்தில் உங்களின் செயல்பாடுகளால் அவை லேசாக கிழிந்தாலும் கருத்தரிப்புக்கு வாய்ப்பு ஏற்படும். அதனால் கவனத்துடன் செயல்படுவது நல்லது. காண்டம் எய்ட்ஸ் நோய்களையும் தடுக்கும். ஒரே காண்டத்தை மீண்டும் மீண்டும் உபயோகம் செய்யக்கூடாது என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள். 

health tips

  • பெண்களுக்கான டயாபர்ம்: 2 இன்ச் முதல் 4 இன்ச் வரையில் வட்ட வடிவில் மோதிரம் போல இணைக்கப்பட்ட பொருள் டயாபர்ம் என்று அழைக்கப்படுகிறது. இதனை தொடக்கத்தில் மருத்துவர் அல்லது மருத்துவ உதவியாளரின் உதவியோடு பொருத்திக்கொண்டு, பழகியதும் சுயமாக பொருத்தலாம். இதனால் கரு அணு - கரு முட்டை இணைப்பு தவிர்க்கப்படும். கருத்தரிப்பை தள்ளிப்போட அதனை பயன்படுத்திவிட்டு, மீண்டும் அதனை சுத்தம் செய்து உபயோகம் செய்துகொள்ளலாம். 
  • செர்விகல் கேப்: டயாபர்ம் போன்று பயன்படுத்தப்படும் செர்விகள் கேப், ரப்பரில் தயாரிக்கப்பட்டது ஆகும். இதனை பயன்படுத்தும் போது செர்விகள் திறந்து மூடப்படும் காரணத்தால் கருத்தரிப்பு தள்ளிபோடப்படும்.  
  • ஸ்பெர்மிசைட்: ஸ்பெர்மிசைட் ரசாயனம் உடலுறவுக்கு முன்பு உறுப்பில் தடவிக்கொள்ளும் பொருள் ஆகும். இது கரு அணுவை செயலிழக்க செய்யும். அதனால் கருத்தரிப்பு தடைபட்டாலும், பக்கவிளைவுகள் உண்டு. இவை மாத்திரை மற்றும் கிரீம் வடிவில் கிடைக்கின்றன.  
  • ஐ.யு.டி: கருத்தடைக்காக உள்ள ஐயுடி எனப்படும் Intrauterine Device சாதனம் சிறிய பிளாஸ்டிக்கால் செய்யப்பட்டு கர்ப்பப்பையில் பொருத்திக்கொள்வது ஆகும். இது கரு அணுவும் - கரு முட்டையும் இணைவதை தடுத்து கர்ப்பத்தை தவிர்க்க வழிவகை செய்கிறது. 

health tips

  • காப்பர் டி: காப்பர் டி என்று அழைக்கப்படும் கருத்தடை சாதனம் 2 முதல் 3 ஆண்டுக்கு ஒருமுறை மாற்றவேண்டியது ஆகும். இதனை மருத்துவரின் உதவியுடன் பொருத்திக்கொள்ளலாம். அளவில் மிகச்சிறிய கருத்தடை சாதனமாக இருந்தாலும், அதனால் பக்கவிளைவுகள் ஏராளம். காப்பர் டி பொருத்தப்பட்ட 5 நாட்கள் வரை பெண்ணுக்கு வலி இருக்கும். மாதவிடாய் நாட்களில் அதிக உதிரப்போக்கு ஏற்பட்டு இரத்தசோகை ஏற்படலாம். கர்ப்பப்பையில் உட்சுவர் தோலில் பிரச்சனை ஏற்படலாம். காப்பர் டி-யை மீண்டும் நீக்கும் போது அதிக வலி ஏற்படலாம். சில நேரங்களில் கர்ப்பப்பை வெளிப்புறம் டியூபில் கரு வளர்ச்சியடைந்து, சரியான மருத்துவ வசதி இல்லாத பட்சத்தில் உயிர்சேதமும் நிகழலாம். 
  • ஹார்மோன் மாத்திரைகள்: கருத்தடையை ஏற்படுத்த ஹார்மோன் மாத்திரைகள் எடுத்துக்கொண்டால், ஈஸ்ட்டிரோஜன் மற்றும் புரோஜெஸ்டிரான் அளவுகள் மாறுபடும். இதனால் கரு வளர்ச்சி தடுக்கப்படும். ஆனால், பக்கவிளைவுகளும் ஏற்படும். பாதுகாப்பு இல்லாத உடலுறவுக்கு பின்னர் கருத்தடை மாத்திரையை எடுத்துக்கொள்வதால் கருத்தரிப்பை தவிர்க்கலாம். ஆனால், பக்கவிளைவுகள் பெண்களுக்கு ஏற்படும். 
  • நிரந்தர கருத்தடை: இரண்டு அல்லது மூன்று குழந்தைகளை பெற்றெடுத்த பின்னர், தங்களுக்கு குழந்தைகள் வேண்டாம் என நினைக்கும் தம்பதிகள் நிரந்தர கருத்தடையை மேற்கொள்ளலாம். இது கரு அணு - கரு முட்டையை எடுத்துச்செல்லும் குழாயை வெட்டி அதன் பணிகள் தடுக்கப்படுகின்றன. அறுவை சிகிச்சையில் கருத்தடை செய்யும் ஆணோ - பெண்ணோ 1 மாதத்திற்கு எவ்வித பளுவையும் தூக்க கூடாது. சிகிச்சை முடிந்து ஒரு வாரம் கடந்தும் வீக்கம், வலி, இரத்தப்போக்கு இருந்தால் மருத்துவரை நாடுவது நல்லது. 

health tips

இன்றளவில் பல அரசு மருத்துவமனைகளிலும் காப்பர் டி கருத்தடை பொருத்தும் நடைமுறையை மருத்துவர்கள் மேற்கொள்கின்றனர். அவற்றை சரியாக பொருந்தாத பட்சத்தில் பெண்களுக்கு பெரும் துயரம் ஏற்படும். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தை சேர்ந்த திவ்யா என்ற பெண் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது தற்காலிக கருத்தடைக்கு மருத்துவரால் காப்பர் டி பொருத்தப்பட்டது.

ஆனால், பெண்ணின் உடல்நிலை மோசமான காரணத்தால் மருத்துவர்கள் தனியார் மருத்துவமனையில் காப்பர் டி கருத்தடை சாதனத்தை அகற்ற சிகிச்சைக்கு அனுமதி செய்தபோது உயிரிழந்துள்ளார். அதுகுறித்த விசாரணை நடந்து வருகிறது. திவ்யாவின் கணவர் கூற்றுப்படி கருத்தடை சாதனம் பொருத்தப்பட்ட பின்னரே அவரின் உடல்நலம் மோசமடைந்துள்ளது என்பது மட்டும் உறுதியாகிறது. அதனால் கருத்தடை சாதனத்தை பொருத்தினால் எவ்வுளவு கவனமாக இருக்க வேண்டும் என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.

health tips

கருத்தடை என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விஷயம். கருத்தடை செய்யாமலும் ஒன்று அல்லது இரண்டு குழந்தைகளை பெற்றுக்கொண்டு உடலுறவில் ஈடுபட்டு சந்தோசமாக இருக்கும் தம்பதிகளும் இங்கு இருக்கிறார்கள். கருத்தடையை பொறுத்த வரையில் அதில் பக்கவிளைவு என்பது கட்டாயம் என்பதால், அதனை தேர்வு செய்யும் முன் தம்பதிகள் சிந்தித்து செயல்படுவது நல்லது.