இப்போதான் கல்யாணமாச்சு.. அதுக்குள்ள விவாகரத்தா?? மனம் வருந்தி பேசிய ரோபோ சங்கர் மகள்!!
ஒரு பெண் கர்ப்பமாக இருப்பதை எப்படி உறுதி செய்வது? அதன் அறிகுறிகள் என்னென்ன?
ஒரு பெண் கர்ப்பமாக இருப்பதை எப்படி உறுதி செய்வது? அதன் அறிகுறிகள் என்னென்ன?
நாகரிக வளர்ச்சி என்ற பெயரில் மனிதன் பல்வேறு விஷயங்களை தனக்கு தெரியாமலேயே பயன்படுத்த ஆரம்பித்துவிட்டான். அதன் விளைவுதான் குழந்தை இன்மை, ஆண்மை குறைவு போன்ற விஷயங்கள்.
குழந்தை இல்லாத காரணத்தால் இன்று பல்வேறு குடும்பங்கள் விவாகரத்து வரை செல்கின்றனர். எனவே ஒரு குடும்பத்திற்கு குழந்தை என்பது மிகவும் முக்கியமான ஓன்று.
திருமணம் ஆனா புதிதில் இருவீட்டாரின் எதிர்பார்ப்பும் எப்போது குழந்தை பிறக்கவும் என்பதுதான். அதை ஒருசில அறிகுறிகள் வைத்து முன்பே கண்டுபிடிக்க முடியும்.
ஆணின் உயிரணுவும், பெண்ணின் கரு முட்டையும் இணைந்து கருத்தரித்தல் நிகழ்கிறது. கருத்தரித்தல் நடந்த 4 நாட்களுக்குப் பின்பே கருவானது கருப்பை நோக்கி நகர்ந்து வருகிறது. கருவானது கருப்பைக்குள் மிதந்து கொண்டிருக்கும் இந்நிலையிலேயே சில ரசாயன மாற்றங்களை உண்டாக்குகிறது.
மாத விளக்கு தள்ளி போகுதல். இது பொதுவாக அனைவரும் அறிந்த ஒன்றுதான். மேலும் கர்ப்பமாக இருக்கும் பெண்ணிற்கு ஆரம்பத்தில் கோமடல், அதிக சிறுநீர் வெளியேறுதல், திடீரென்று மார்பகம் பெரிதாக்குதல் மேலும் மார்பகத்தில் வலி ஏற்படுதல் போன்ற அறிகுறிகளை வைத்து கர்ப்பமாக உள்ளதை கண்டறிய முடியும்.
மேலும் மார்பகக் காம்புகள் கருப்பாக மாறும் மலச்சிக்கல் இருப்பது போன்ற உணர்வு தோன்றும், புளி, ஐஸ், மாங்காய் போன்றவற்றின் மீது திடீரென ஏற்படும் ஆசை. இவை அனைத்தும் குழந்தையை எதிர்நோக்கும் ஒரு பெண்ணுக்கு, கருத்தரித்திருப்பதை உணர்ந்து கொள்ளலாம். இதை உறுதி செய்ய முறையாக மருத்துவரை அணுகுவது சிறந்தது.