அட.. நயன்தாராவுக்கு ரொம்ப பிடித்த சீரியல் இது தானாம்! மிஸ் பண்ணமா தினமும் பார்த்துடுவாங்கலாம்!
அச்சத்தில் மக்கள்! மீண்டும் தலைதூக்கும் கொரானா! இந்த இடங்களில் தற்போது அதிகமாக பரவுகிறதாம்...

2019ஆம் ஆண்டில் சீனாவின் வுஹான் நகரில் தொடங்கி உலகையே அச்சுறுத்திய கொரோனா வைரஸ், நீண்ட காலப் போராட்டத்திற்கு பிறகு கட்டுப்பாடாகி மக்களுக்கு சற்று நிம்மதியை ஏற்படுத்தியது. தடுப்பூசி மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மூலம் பெரும் பேரழிவிலிருந்து வெளியேறிய உலகம், இப்போது மீண்டும் கொரோனா அச்சத்தில் சிக்கியுள்ளதைப் போல உள்ளது.
தற்போது சீனாவின் ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரில் கொரோனா தொற்றுகள் மீண்டும் அதிகரித்து வருவதால், மக்கள் மத்தியில் கவலை அதிகரித்து வருகிறது.
ஹாங்காஙில் நிலைமை கவலைக்கிடமாகிறது
மக்கள் தொகை அதிகம் உள்ள ஹாங்காஙில், தினசரி தொற்றுகள் கணிசமாக உயர்ந்து வருகின்றன. இதன் விளைவாக, கொரோனா காரணமாக உயிரிழப்புகளும் அதிகரித்து வருவதாக ஹாங்காங் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நிலைமையை கட்டுப்படுத்தும் முயற்சியாக, தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
சிங்கப்பூரில் ஒரு வாரத்தில் 14,200 பேர் பாதிப்பு
இதேபோல, சிங்கப்பூரிலும் கொரோனா பாதிப்பு வேகமாகப் பரவி வருகிறது. கடந்த 3ஆம் தேதியுடன் முடிந்த வாரத்தில் மட்டும் 14,200 புதிய கொரோனா தொற்றுகள் பதிவாகியுள்ளன. மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகள் எண்ணிக்கையும் தொடர்ந்து உயர்வடைந்து வருகிறது.
சிங்கப்பூர் சுகாதாரத்துறை தெரிவித்ததாவது, "மக்களில் எதிர்ப்பு சக்தி குறைந்து வருவதால் தொற்று பரவல் அதிகரிக்கிறது" எனும் கணிப்புகளை வெளியிட்டது. இதனால், கொரோனா மீண்டும் பரவக்கூடும் என்ற அச்சம், ஆசியாவின் மற்ற நாடுகளுக்கும் பரவ தொடங்கியுள்ளது.
கொரோனா ஒரு மறக்க முடியாத அனுபவமாக இருந்தாலும், அதன் தாக்கம் இன்னும் முற்றிலும் முடிவடையவில்லை. ஹாங்காங் மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளில் ஏற்பட்டுள்ள தற்போதைய நிலைமை, மற்ற நாடுகளுக்கும் எச்சரிக்கையாக அமையக்கூடும். முன்னேற்பாடுகளுடன் தன்னை பாதுகாத்துக்கொள்ளும் பழக்கம் மக்கள் மத்தியில் நிலைத்து நிற்க வேண்டிய அவசியம் இன்று மீண்டும் தோன்றியுள்ளது.