மகத்துடன் கொண்ட காதல், மனம் உருகி பேசிய யாஷிகா! என்ன சொல்லியிருக்கார் தெரியுமா.!

மகத்துடன் கொண்ட காதல், மனம் உருகி பேசிய யாஷிகா! என்ன சொல்லியிருக்கார் தெரியுமா.!



yashika-talk-about-love

பிரபல தனியார் தொலைக்காட்சில் ஒளிபரப்பான நிகழ்ச்சி பிக்பாஸ் சீசன் 2 .இதில் போட்டியாளராக பங்கேற்றவர் யாஷிகா ஆனந்த்.இவர்  இருட்டு அறையில் முரட்டு குத்து, நோட்டா ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

யாஷிகா பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்தபோது மற்றொரு போட்டியாளரான மகத்துடன் நெருக்கமானார். மேலும் மகத்தும் தானும் யாஷிகாவை காதலிப்பதாக கூறிய நிலையில் காதல் நிகழ்ச்சியோடு முடிவுக்கு வந்தது.

ஏனெனில் மகத் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பே பிராச்சி என்ற பெண்ணை காதலித்து வந்தார்.நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்ததும்  காதலியுடன் மீண்டும் இணைந்தார். 

magath

இந்நிலையில் இதுபற்றி அமைதியாக இருந்த யாஷிகா தற்போது இதுகுறித்து உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் ‘என்னதான் நான் பக்குவமான பெண் என்றாலும் உறவு என்று வரும் போது நான் ரொம்ப பலவீனமானவள்.மனசுக்குள் ஏராளமான உண்மையான அன்பு வைத்திருப்பவள் நான் . யாருக்காவது யாருக்காவது வாக்கு கொடுத்தால் மீற மாட்டேன். இந்த உலகமே எனக்கு எதிராக நின்றாலும் அதைப்பற்றி கவலைப்பட மாட்டேன்.

ஆனால் என்னை அன்பை வைத்து பலரும் எளிதில் ஏமாற்றிவிடுவார்கள். அப்படி ஏமாந்த அனுபவங்கள் எனக்கு நிறைய இருக்கு. ‘உன் நட்பு வட்டத்தைச் சின்னதா வெச்சுக்கோ. யாரையும் நம்பிடாதே’னு அம்மாவும் அப்பாவும் அடிக்கடி சொல்வாங்க. என்னுடைய அந்த அன்புதான் அடுத்தவங்களுக்கான ஆயுதமா இருக்கு. ’ என்று உருக்கமாக கூறியுள்ளார்.