பாவம் யாசிகா! இப்படியா செய்து மாட்டிக்கொள்வது

பாவம் யாசிகா! இப்படியா செய்து மாட்டிக்கொள்வது



yashika-puts-autograph-in-rupee-note

பிக்பாஸ் மூலம் பிரபலமானவர்கள் பலர். அதில் ஒருவராக தன்னை இணைந்து கொண்டவர் கவர்ச்சி நடிகை யாசிகா ஆனந்த்.

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் இவரை தெரியாதவர்கள் கூட பிக்பாஸ் மூலம் தான் அடையாளம் கண்டு கொண்டனர்.

yashika

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் முடிந்தது. தற்போது இவர் இரண்டு மூன்று படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.

சமீபத்தில் நடிகை யாஷிகா தீம் பார்க் ஒன்றிற்கு சென்றுள்ளார். அங்கே வந்திருந்த சில மாணவர்கள் யாஷிகாவிடம் புகைப்படம் எடுத்துக்கொண்டதோடு அவரிடம் ஆட்டோக்ராப் வாங்கியுள்ளனர். அவர் அப்போது போட்ட ஆட்டோகிராப் தான் இப்போது அவரை சர்ச்சையில் சிக்க வைத்துள்ளது. அப்படி அந்த ஆட்டோகிராபில் என்ன இருக்க இருக்கிறது என்று யோசிக்கிறீர்களா?

yashika

ரூபாய் நோட்டுக்களில் கையப்பம் போடுவது சட்டப்படி குற்றம் என்று இருக்கையில் அதனை அறியாது யாஷிகா மாணவர்களுக்கு ரூபாய் நோட்டுக்களில் ஆட்டோகிராப் போட்டுள்ளார். சட்டத்திற்கு புறம்பாக யாசிகா செய்த இந்த செயல் சர்ச்சையை ஏற்படுத்தியள்ளது.