நலமுடன் வீட்டிற்கு வர பிரார்த்தித்த அனைவருக்கும் நன்றி: விஜயகாந்த் நெகிழ்ச்சி பதிவு.!

நலமுடன் வீட்டிற்கு வர பிரார்த்தித்த அனைவருக்கும் நன்றி: விஜயகாந்த் நெகிழ்ச்சி பதிவு.!



Vijayakanth latest post gone viral

தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் கடந்த நவம்பர் மாதம் 18-ஆம் தேதி காய்ச்சல் காரணமாக போரூரில் செயல்பட்டு வரும் மியாட் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார். 

cinema news

அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சையளித்து வந்த நிலையில், திடீரென உடல்நலக்குறைவு கடுமையாக ஏற்பட்டு பின் உடல்நலம் பூரண குணமடைந்து வீட்டிற்கு திரும்பினார். 

இந்நிலையில் தனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி என கேப்டன் விஜயகாந்த் பூரண நலம்பெற வேண்டி வாழ்த்திய திரையுலகைச் சார்ந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் அரசியல் கட்சி பிரமுகர்களுக்கும், தேமுதிக மாவட்ட கழகச் செயலாளர்களுக்கும், கழக நிர்வாகிகள், கழக தொண்டர்கள் அனைவருக்கும், எனக்காக பிரார்த்தனை செய்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் கூறியுள்ளார்.