#Baakyalatsumi: எழிலின் வாழ்க்கையை கெடுக்க நினைக்கும் பாட்டி.. அண்ணனாக செய்யும் காரியமா இது?..!
#Baakyalatsumi: எழிலின் வாழ்க்கையை கெடுக்க நினைக்கும் பாட்டி.. அண்ணனாக செய்யும் காரியமா இது?..!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நெடுந்தொடரில், பாக்கியலட்சுமி தமிழக மக்களால் ஏகபோகமாக வரவேற்கப்படும் தொடராகும். இத்தொடரில், பிள்ளைப்பூச்சியாக இருந்து வரும் பாக்கியலட்சுமி கணவரின் துரோகத்தால் தனியொரு மனிதராக வாழவேண்டிய படிநிலைகளை ஒவ்வொன்றாக கற்றுக்கொள்கிறார்.
அவரது வாழ்க்கையில் அடுத்தடுத்து பல துயரங்கள் நடந்தாலும், அதனை வெற்றிகரமாக எதிர்கொண்டு வருகிறார். இதனால் அத்தொடர் தமிழக மக்களால் விரும்பி பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், நடப்பு வாரத்தில் பாக்கியலட்சுமியின் இரண்டாவது மகன் எழிலின் காதல் வாழ்க்கையில் நடக்கப்போகும் கலவரம் குறித்த காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
கணவரை இழந்து குழந்தையோடு வாழ்ந்து வரும் அமிர்தாவும் - எழிலும் ஒருகட்டத்தில் காதல் வயப்பட்டுவிட, அவர்கள் திருமணம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடக்கிறது. இதற்கு மறுப்பு தெரிவிக்கும் பாக்கியாவின் மாமியார், மூத்த மகன் செய்யும் எதிர்ப்பு வேலையால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த ப்ரோமோ ட்ரெண்டிங்காகி வருகிறது.