பட வாய்ப்பு இல்லாமல் காட்டில் ஜாலியாக சுற்றித்திரியும் விஜய் டிவி சீரியல் நடிகை..

பட வாய்ப்பு இல்லாமல் காட்டில் ஜாலியாக சுற்றித்திரியும் விஜய் டிவி சீரியல் நடிகை..



vijay-tv-actress-saranya-viral-instagram-post

செய்தி வாசிப்பாளராகவும், நடிகையாகவும் பிரபலமானவர் சரண்யா தூரடி. இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'நெஞ்சம் மறப்பதில்லை எனும் சீரியலின் மூலம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமானார்.

Saranya

இதன் பிறகு மேலும் ஒரு சில சீரியல்களில் நடித்து வந்த சரண்யா, சின்ன திரையில் இருந்து வெள்ளி திரையில் தனது நடிப்பு திறமையின் மூலம் அறிமுகமானார். வெள்ளி திரையில் ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி, சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது போன்ற திரைப்படங்களில் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்தார்.

ஆனால் இப்படம் பெரிதளவில் வெற்றி பெறவில்லை என்பதால் இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் எதுவும் வரவில்லை. இதனை அடுத்து சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் நடிகை சரண்யா.

Saranya

இது போன்ற நிலையில், காடுகளின் மேல் உள்ள ஆர்வத்தால் தற்போது தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு சென்று புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி ரசிகர்கள் இவரை பாராட்டி கமெண்ட் செய்து வருகின்றனர்.