இனி வில்லனாக நடிக்கமாட்டேன்.! விஜய் சேதுபதி ஷாக் முடிவு.! இதுதான் காரணமா??

இனி வில்லனாக நடிக்கமாட்டேன்.! விஜய் சேதுபதி ஷாக் முடிவு.! இதுதான் காரணமா??



vijay-sethupathi-decide-to-not-act-in-villain-role

தமிழ் சினிமாவில் ஹீரோ,வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகராக தன் நடிப்பின் மூலம் மக்களின் மனதில் மக்கள் செல்வன் என்ற பட்டத்தை பெற்றவர்தான் நடிகர் விஜய் சேதுபதி. இவர் படங்களில் கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு தன்னை முழுமையாக மாற்றிக்கொண்டு நடிப்பதில் திறமை வாய்ந்தவர். இவர் தற்போது அதிகளவு வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இதை தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதி கோவா சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்டபோது. இனி நான் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கப் போவதில்லை என கூறியது தற்போது ரசிகர்களிடையே பேசுபொருளாக மாறியுள்ளது.
இவர் மாதவன் கூட்டணியில் விக்ரம் வேதா படத்தில் முதல்முதலாக வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

vijay sethupathi

அதனை தொடர்ந்து பல படங்களில் அவர் வில்லனாக நடித்துள்ளார். இவர் தமிழ் மட்டுமின்றி பிறமொழி படங்களிலும் வில்லனாக நடித்துள்ளார். இறுதியாக அவர் ஷாருக்கான் நடிப்பில் வெளிவந்த ஜவான் படத்தில் வில்லனாக நடித்திருந்தார். 

இந்நிலையில் விஜய் சேதுபதி கதாநாயகர்கள் பலர் கேட்டுக் கொண்டதாலே  வில்லனாக நடித்தேன். ஹீரோக்களை விட வலிமையானதாக தெரிந்துவிடக் கூடாது என கவனமாக நடிக்க வைப்பார்கள். நான் நடித்த நிறைய காட்சிகளை நீக்கியும் உள்ளனர் அதனால் தற்போது வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டாம் என முடிவு செய்துள்ளதாக கூறியுள்ளார்.