நயன்தாரா புகைப்படத்தை பதிவிட்டு விக்னேஷ் சிவன் என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா..வைரலாகும் ட்வீட் பதிவு.!

நயன்தாரா புகைப்படத்தை பதிவிட்டு விக்னேஷ் சிவன் என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா..வைரலாகும் ட்வீட் பதிவு.!



Vignesh sivan twitter about nayanthara

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் காதலித்துவருவது அனைவர்க்கும் தெரிந்த ஒன்றுதான். இருவரும் எப்போது திருமணம் செய்துகொள்ளப்போகிறார்கள் என்பதுதான் தற்போது அனைவரின் கேள்வியாகவும் உள்ளது.

நயன்தாரா இதற்கு முன்னதாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான நானும் ரெளவுதான் படத்தில் நடித்திருந்தார். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.அதனை தொடர்ந்து தற்போது இரண்டாவது முறையாக அதே கூட்டணியில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தை இயக்கியுள்ளார்.

twitter

படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இறுதிக்கட்ட பணியான டப்பிங் பணியில் படக்குழுவினர் விறுவிறுப்பாக ஈடுபட்டுவருகின்றனர். மேலும் நயன்தாராவே டப்பிங் பேசுகிறார். இப்புகைப்படங்களை பகிர்ந்துள்ள விக்னேஷ் சிவன், "கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் வசனங்களை.... அதற்கு நீயே டப்பிங் பண்றது மிகுந்த சந்தோஷம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.