திருமணமாகி 5 வருஷத்துக்கு அப்பறம் தான்.., லேடி சூப்பர்ஸ்டார் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?.. அமைச்சர் மா. சுப்பிரமணியன் பகீர்..!!

திருமணமாகி 5 வருஷத்துக்கு அப்பறம் தான்.., லேடி சூப்பர்ஸ்டார் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?.. அமைச்சர் மா. சுப்பிரமணியன் பகீர்..!!



vignesh-shivan-nayanthara-twin-babies-issue

 

இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும், நயன்தாராவுக்கும் கடந்த ஜூன் மாதம் மகாபலிபுரத்தில் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. இதன் பின்னர் இருவரும் வெளிநாடு சென்றிருந்த நிலையில்,  சமீபத்தில் விக்னேஷ் சிவன் பிறந்தநாளையும் மகிழ்ச்சியாக கொண்டாடினர்.

Director Vignesh shivan

இவர்களுக்கு திருமணமாகி 4 மாதமாகும் நிலையில், வாடகை தாயின் மூலமாக இரட்டை குழந்தையை பெற்றெடுத்துள்ளனர். அத்துடன் திருமணத்திற்கு முன்னரே இவர்கள் பிளான் செய்துதான் வாடகைதாய் மூலம் குழந்தை பெற்றெடுத்தார்கள் என்ற சர்ச்சை கிளம்பியது. 

Director Vignesh shivan

இந்நிலையில் இதுகுறித்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், திருமணமான 5 ஆண்டுகளுக்கு பின்னரே வாடகைதாய் மூலம் குழந்தை பெற முடியும். நயன்தாரா - விக்னேஷ் சிவன் கொடுக்கும் விளக்கத்தின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.