13 வயதில் நடிகை வரலட்சுமி சரத்குமாரை வச்சு செஞ்ச ஐந்து பேர்! யார் அந்த ஐந்து பேர் தெரியுமா?

13 வயதில் நடிகை வரலட்சுமி சரத்குமாரை வச்சு செஞ்ச ஐந்து பேர்! யார் அந்த ஐந்து பேர் தெரியுமா?



varalaxmi-sarathkumar-open-talks-at-unnai-arinthal-show

பிரபல தமிழ் நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி. விக்னேஷ் சிவன் இயக்கிய போடா போடி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். அதை தொடர்ந்து ஓரிரு தமி லெப்டான்களில் நடித்திருந்தாலும் முன்னணி நடிகைகளில் ஒருவராக இவரால் வர இயலவில்லை. இந்நிலையில் தளபதி விஜய் நடிக்கும் சர்க்கார் திரைப்படத்தில் சில முக்கிய காட்சிகளில் வரலட்சுமி நடிப்பதாக கூறப்பட்டுள்ளது. மேலும் இவரது நண்பர் விஷால் நடிக்கும் சண்டக்கோழி இரண்டாம் பாகத்தில் வில்லியாக நடிக்கிறார் வரலட்சுமி.

இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தனக்கு இளம் வயதில் நடந்த பாலியல் பலாத்காரம் குறித்து மனம் திறந்துபேசி, பார்வையாளர்கள் அனைவரையும் கதிகலங்கவைத்தார் நடிகை வரலட்சுமி.

sarathkumar

படங்களில் பிசியாக நடித்துக்கொண்டிருக்கும் போதும், தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் டாக் ஷோ ஒன்றை இந்த ஞாயிறு முதல் துவங்கியிருக்கிறார் வரலட்சுமி.
‘என்னை அறிந்தால்’ என்ற தலைப்பில் வெளியாகும் அந்த நிகழ்ச்சியில் வாரந்தோறும் சமூகத்தில் நடைபெறும் அநீதிகள் குறித்து விவாதிக்கப்படுமென்று தெரிகிறது.


இந்த நிகழ்ச்சியின் முதல்நாளான இன்று குழந்தைகளுக்கு எதிராக நிகழும் பாலியல் குற்றங்கள் சம்மந்தமாக விவாதிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பேசிய பலரும் குற்றவாளிகளுக்கு கோர்ட் தீர்ப்பை விட தெருவில் நிற்கவைத்து தரும் தண்டனைகளே பயத்தைக்கொடுக்கும் என்று கருத்து தெரிவித்தார்கள்.

ஒருசிலர் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்று பாலியல் தொல்லை தரும் நபர்களை ரோடில் நிக்கவைத்து அவர்களது மர்ம இடத்தில் ஆசிட்டை ஊற்றவேண்டும் என ஆக்ரோஷமாக பேசத்தொடங்கினார்கள்.

sarathkumar


நிகழ்ச்சியின் முடிவில் தான் ஏன் இந்த நிகழ்ழ்சியை நடத்த ஒப்புக்கொண்டேன் என்று விளக்கமளித்த வரலட்சுமி, ‘ஏனென்றால் நானே பாலியல் தொல்லைக்கு ஆளான குழந்தைதான். என்னுடைய13 வயதில் ஒரு டிரைவர், இரண்டு மேனேஜர்கள், ஒரு செக்ரட்டரி மற்றும் ஒரு தாதாவால் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாக்கப்பட்டேன்’ என்று ஒரு பகீர் உண்மையை உடைத்து பார்வையாளர்களை அதிர்ச்சியில் உறையவைத்தார்.