மத்த விஷயத்துக்கு ஹோட்டல்ல மீட் பண்ணலாமா?., என்கிட்ட இப்படிலாம் - அட்ஜெஸ்ட்மென்ட் குறித்து ஆவேசமாக பேசிய வரலட்சுமி சரத்குமார்..!!

மத்த விஷயத்துக்கு ஹோட்டல்ல மீட் பண்ணலாமா?., என்கிட்ட இப்படிலாம் - அட்ஜெஸ்ட்மென்ட் குறித்து ஆவேசமாக பேசிய வரலட்சுமி சரத்குமார்..!!



Varalakshmi sarathkumar angry speech about adjustment

தமிழில் சுப்ரீம் ஸ்டாராக இன்று வரை ஜொலித்துவரும் நடிகர் சரத்குமார். இவர் முந்தைய காலங்களில் கதாநாயகன் கதாபாத்திரத்தில் பல ஹிட் படங்களை கொடுத்திருந்த நிலையில், தற்போது தனக்கு வரும் கதாபாத்திரத்தை விடாமல் நடித்து வருகிறார். 

அதேபோல அரசியலிலும் கவனம் செலுத்தி வருகிறார். இவருக்கு வரலட்சுமி என்ற மகள் இருக்கிறார். இவர் கதாநாயகி, வில்லி என பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து அசத்தி வருகிறார்.

சமீபத்தில் கொன்றால் பாவம் என்ற திரைப்படம் இவரின் நடிப்பில் வெளியாகி கலமையான விமர்சனத்தை பெற்றது. சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரை போல, வரலட்சுமி எப்போதும் தயங்காமல் தனக்கான கருத்தை முன்வைக்கும் குணம் கொண்டவர். 

actress varalakshmi sarathkumar

அத்துடன் சினிமாவில் நடக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை தொடர்பாக பேசிய அவர், "என்னிடம் ஒருவர் ஷோ தொடர்பாக பேச வந்து எனது வீட்டில் பேசி முடித்த பின்னர் பிற விஷயங்களுக்கு நாம் ஹோட்டலில் சந்திக்கலாம் என்று கூறினார். 

நான் அவரிடம் அமைதியாக இங்கிருந்து கிளம்பிவிடுங்கள் என்று கூறி, அதனை கடந்து சென்றேன். திரைத்துறையில் எனது பெற்றோர்கள் இருவரும் இருக்கிறார்கள். 

எனக்கே இதுபோன்ற விஷயம் சாதாரணமாக நடக்கிறது என்றால் சாதாரணமாக திரைத்துறையில் காலடி எடுத்து வைக்க நினைக்கும் பெண்களுக்கு எப்படியான பிரச்சனைகள் வரக்கூடும்" என்று தெரிவித்தார்.