பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் இருந்து திடீரென விலகிய வனிதா! இவ்வளவு மோசமாக நடந்ததா? குமுறல் பதிவு!!

பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் இருந்து திடீரென விலகிய வனிதா! இவ்வளவு மோசமாக நடந்ததா? குமுறல் பதிவு!!



vanitha-walked-out-from-bigboss-jodikal-show

தமிழ் சினிமாவில் நட்சத்திர ஜோடிகளாக விளங்கிய விஜயகுமார் மற்றும் மஞ்சுளாவின் மகள் வனிதா விஜயகுமார். இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து அவர் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராக கலந்து கொண்டார். 

பின்னர் குக் வித் கோமாளி சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு வெற்றியாளருமானார். தற்போது பிக்பாஸ் ஜோடிகள் நடன ரியாலிட்டி ஷோவில் கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் அவர் தற்போது தற்போது பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

அதில் வனிதா, பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதற்கு முன்பு நான் எதிர்கொண்ட தாக்கங்களை குறித்து கூறுகிறேன். அவமானப்படுத்துவது, கொடுமைப்படுத்துவது என நான் தொடர்ந்து பல பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகிறேன். எனது குடும்பமாகவே இருந்தாலும் அதனை ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்பது உலகிற்கே தெரியும். பிக்பாஸ் 3 நிகழ்ச்சிக்குப் பிறகு, விஜய் தொலைக்காட்சி எனக்கு மற்றொரு வீடாக மாறியது. விஜய் டிவியோடு எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் வேலை செய்யும் இடத்தில் நிகழும் மோசமான தாக்குதல்களையும், நெறியற்ற நடவடிக்கைகளையும் என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது.

 எனது வளர்ச்சியைப் பொறுத்துக் கொள்ள முடியாத சிலரால் நான் அவமானப்படுத்தப்பட்டேன். எனக்கு அநீதி நிகழ்த்தப்பட்டது. பணியிடங்களில் பெண்களை மோசமாக நடத்துவது ஆண்கள் மட்டுமல்ல, பொறாமை பிடித்த பெண்களும்தான். கிடைக்கும் வாய்ப்புகளை ஒழிக்க முயல்கின்றனர். பல ஆண்டுகள் அனுபவமிக்க சீனியர் ஒருவர் தன்னைவிட வயது குறைந்தவர்களிடம் இப்படி நேர்மையின்றி நடந்துகொள்வது எனக்கு வருத்தமளிக்கிறது. வாழ்நாள் முழுவதும் பல கஷ்டங்களை சந்தித்து, தற்போது ஆண் துணையின்றி மூன்று குழந்தைகளுக்கு தாயான எனக்கு ஆதரவாக நிற்கவில்லை என்றாலும், எனது வாழ்க்கையை மோசமானதாக மாற்றுவது ஒரு பெண்ணாக இருப்பது மிகவும் வேதனையாக இருக்கிறது. மேலும், என்னால் இந்த போட்டியில் இருந்து விலகிய சுரேஷ் சக்கரவர்த்தியிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.