எனது திருமணத்தை பற்றி பேச என் தந்தைக்கு தகுதியே இல்லை!. கோவத்தில் நடிகர் விஜயகுமாரின் லீலைகளை போட்டுடைத்த வனிதா!.

எனது திருமணத்தை பற்றி பேச என் தந்தைக்கு தகுதியே இல்லை!. கோவத்தில் நடிகர் விஜயகுமாரின் லீலைகளை போட்டுடைத்த வனிதா!.



vanitha talking angry about vijayakumar


எனது தந்தை விஜயகுமாருக்கு இரண்டு மனைவிகள், அவர் எனது வாழ்க்கை குறித்து கேட்பதற்கு அவருக்கு எந்த தகுதியும் கிடையாது என நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா தெரிவித்துள்ளார்.

எனது குடும்பத்துக்கு நான் அச்சுறுத்தலாக இருக்கிறேன் அதனால் தான் எனக்கும் எனது தந்தைக்கும் அடிக்கடி சச்சரவு இருந்துகொண்டே இருக்கிறது.

எனது அண்ணன் அருண் விஜய் எனது தந்தைக்கு அழுத்தம் தருகிறார். மருமகன் ஹிரியும் தனது வேறு பக்கம் அழுத்தம் தருகிறார் இதனால் தான் எனது தந்தை வீட்டை விட்டு வெளியே விரட்டினார். வீட்டில் எந்த தவறு நடந்தாலும் நான் அதை தைரியமாக கேட்பேன். அதற்காக தான் என்னை அவர்களுக்கு பிடிக்கவில்லை.

எனது குடும்பத்தில் நான் மிகவும் தைரியமானவள். என்னுடைய இந்த குணம் அவர்களுக்கு ஒரு அச்சுறுத்தலாக இருக்கலாம். எனது அம்மா பெயரில் இருக்கும் சொத்துக்களை விற்று புது சொத்து வாங்குவார் எனது தந்தை.

வாங்கப்பட்ட புது சொத்தில் ஆடிட்டிங் பிரச்சனை இருப்பதாக கூறி எனது அம்மாவை நம்ப வைத்து அந்த சொத்தினை அவரது முதல் மனைவி முத்து கண்ணு அவர்கள் பெயரில் எழுதிவைப்பார். அதன் பின்னர் அந்த சொத்து அப்படியே அருண் விஜய் பெயரில் மாற்றப்படும் எனது அம்மாவும் இந்த விஷயத்தில் விஜயகுமாரால் ஏமாற்றப்பட்டவர் தான்.

எனது தந்தை சம்பாதித்த பணத்தை அண்ணன் அருண் விஜய் அழித்துவிட்டார். அவருக்கெல்லாம் இப்போது படங்களில் சான்ஸ் கிடைப்பதே பெரிய விசயம். இதில் அவருக்கு வருமானம் எப்படி வரும்.

இதுதான் எங்கள் குடும்பத்தில் தொடர்ந்து நடந்து வருகிறது. நான் பயந்து ஓடவேண்டும், என குடும்பத்தினர் அனைவரும் எதிர்பார்க்கின்றனர். நான் இரண்டு திருமணம் செய்துகொண்டதை பற்றி பேசுகிறார்கள், அப்படியென்றால் எனது அப்பாவுக்கு இரண்டு மனைவி. அவருககு என்னை பற்றி கேட்பதற்கு எந்த தகுதியும் கிடையாது.

நான் வசிப்பது குடும்பமே கிடையாது. தேவையில்லாமல் இந்த வயதில் எனது தந்தை இப்படி நடந்துகொள்கிறார். நான் எனது அப்பாவிடம் ஏற்கனவே சொல்லிவிட்டேன். இனி சம்பாதித்து யாருக்கு கொடுக்கப்போகிறீர்கள். ஆனால் எனது தந்தை பலரின் பேச்சை கேட்டு இவ்வாறு செய்கிறார் என வனிதா குமுறுகிறார்.