பலநாள் போராட்டம் வீண்போனது! காலமானார் பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம்!!

பலநாள் போராட்டம் வீண்போனது! காலமானார் பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம்!!



SPB passed away at age of 74

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் அவர்கள் காலமானார்.

கொரோனா தொற்று காரணமாக கடந்த மாதம் 5ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் எஸ் பி பாலசுப்ரமணியம். தொடக்கத்தில் சீராக இருந்த அவரது உடல்நிலை நாளடைவில் பின்னடைவை சந்தித்தது.

இதனையடுத்து கடந்த மாதம் 14ஆம் தேதி அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்த நிலையில் அவர் அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது.

SPB death news

மேலும் உயிர் காக்கும் அதிநவீன எக்மோ கருவியின் உதவியுடன் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை நடைபெற்று வந்த நிலையில் எஸ்பி பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும் அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் எனவும் அவரது மகன் எஸ்பிபி சரண் மற்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவித்தது.

ஆனால் கடந்த 24 மணி நேரமாக எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்களின் உடல்நிலை மோசமடைந்து வருவதாகவும், அவர் மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும் மருத்துவமனை சார்பில் நேற்று அறிக்கை வெளியிடப்பட்டது.

SPB death news

இதனையடுத்து எஸ்.பி பாலசுப்ரமணியம் அவர்களின் ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் உட்பட பலரும் அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என பிரார்த்தனை செய்யத் தொடங்கினார். ஆனால் ரசிகர்களின் பிரார்த்தனை மற்றும் சிகிச்சை பலனின்றி எஸ்.பி பாலசுப்ரமணியம் அவர்கள் தனது 74 ஆவது வயதில் இன்று காலமானார்.

எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்களின் மறைவிற்கு அவரது ரசிகர்கள் தொடங்கி சினிமா பிரபலங்கள் பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.