எஸ்.பி.பி அவர்களின் உடல்நிலை தற்போது எப்படி உள்ளது..? எஸ்.பி.பி மகன் வெளியிட்ட புது தகவல்.!

எஸ்.பி.பி அவர்களின் உடல்நிலை தற்போது எப்படி உள்ளது..? எஸ்.பி.பி மகன் வெளியிட்ட புது தகவல்.!



SPB Health condition latest update

தந்தையின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், மருத்துவர்கள் தொடர்ந்து அவரது உடல்நிலையை கண்காணித்து வருவதாகவும் எஸ்.பி பாலசுப்ரமணியன் அவர்களின் மகன் எஸ்பிபி சரண் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

கொரோனா  நோய்த்தொற்று காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் அவர்களின் உடல்நிலை கடந்த 14ம் தேதியிலிருந்து மிக மோசமடைந்து, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 

உயிர் காக்கும் எக்மோ கருவி மற்றும் வென்டிலேட்டர் உதவியுடன் எஸ்.பி பாலசுப்ரமணியம் அவர்களுக்கு சிகிச்சை வழங்கப்படுவதாகவும், ஆனாலும் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.  இதனையடுத்து எஸ்.பி.பி ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் உட்பட பலரும் எஸ்.பி.பி அவர்கள் குணமடைந்து விரைவில் வீடு திரும்ப வேண்டும் என பிரார்த்தனை செய்யத் தொடங்கினர். 

corona

அனைவரின் பிரார்த்தனை மற்றும் மருத்துவர்களின் அபார முயற்சி காரணமாக எஸ்.பி பாலசுப்ரமணியம் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும், அவருக்கு சுயநினைவு திரும்பி விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில் எஸ்.பி.பி அவர்களின் உடல்நிலை குறித்து அவரது மகன் எஸ்.பி.பி சரண் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில், "தந்தையின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், மருத்துவர்கள் அவரை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், எஸ்பிபி அவர்களுக்கு பிசியோதெரபி சிகிச்சை செய்யப்பட்டு வருவதால் அவர் விரைவில் குணமடைந்து வீட்டிற்கு திரும்புவார்" என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.