மருத்துவமனை முன் குவிக்கப்பட்டுள்ள போலீசார்! மருத்துவமனைக்கு விரைந்த குடும்பத்தினர். எஸ்பிபி மிகவும் கவலைக்கிடம்.

மருத்துவமனை முன் குவிக்கப்பட்டுள்ள போலீசார்! மருத்துவமனைக்கு விரைந்த குடும்பத்தினர். எஸ்பிபி மிகவும் கவலைக்கிடம்.



spb health condition latest news

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை மிக மோசமாக உள்ளநிலையில் அவரது குடும்பத்தினர் தற்போது மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர்.

கொரோனா தொற்று காரணமாக கடந்த மாதம் 5-ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில், பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அனுமதிக்கப்பட்டார். தொடக்கத்தில் அவரது உடல்நிலை சீராக இருந்தபோதிலும் கடந்த மாதம் 14-ம் தேதி அவரது உடல்நிலை மோசமடைந்ததால் தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டு வெண்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டது.

SPB death news

அதனை தொடர்ந்து எஸ்பி பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை மேலும் மோசமடைந்தநிலையில் அவருக்கு உயிர்காக்கும் அதிநவீன எக்மோ கருவியின் உதவியுடன் சிகிச்சை வழங்கப்பட்டுவந்தது. இந்நிலையில் செப்டம்பர் மாதத்தின் முதல்வாரத்திலிருந்தே எஸ்.பி.பி.யின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வந்ததாக அவரது மகன் எஸ்பி சரண் மற்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவித்தது.

மேலும் எஸ்பி பாலசுப்ரமணியம் அவர்கள் விரைவில் வீடுதிரும்புவார் எனவும் கூறப்பட்டுவந்தது. இந்நிலையில் எஸ்பி பாலசுப்ரமணியம் அவர்கள் சிகிச்சைபெற்றுவரும் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனை நேற்று வெளியிட்ட அறிக்கை பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. கடந்த 24 மணி நேரமாக அவரது உடல்நிலை மோசமடைந்து வருவதாகவும், எஸ்பி பாலசுப்ரமணியம் அவர்கள் மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

SPB death news

இதனை தொடர்ந்து எஸ்பி பாலசுப்ரமணியம் அவர்கள் குணமடையவேண்டும் என அவரது ரசிகர்கள் தொடங்கி சினிமா பிரபலங்கள் உட்பட பிரார்த்தனை செய்ய தொடங்கியுள்ளனர். இந்நிலையியல் எஸ்பி பாலசுப்ரமணியம் அவர்கள் சிகிச்சை பெரும் மருத்துவமனைக்கு அவரது குடும்பத்தினர் வருகைதந்துள்ளனர்.

எஸ்பி பாலசுப்ரமணியம் அவர்களின் மகன் சரண், மகள் பல்லவி, மனைவி ஆகியோர் மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர். மேலும் மருத்துவமனை முன்பு போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.