கொரோனாவிலிருந்து மீண்டார் எஸ்.பி.பாலசுப்ரமணியம்.. எஸ்.பி.பி.சரண் வெளியிட்ட புதிய தகவல்.!

கொரோனாவிலிருந்து மீண்டார் எஸ்.பி.பாலசுப்ரமணியம்.. எஸ்.பி.பி.சரண் வெளியிட்ட புதிய தகவல்.!



sp-chran-shares-that-spb-got-negative-for-corona

பிரபல பின்னணி பாடகர் எஸ். பி.பாலசுப்ரமணியனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர் கடந்த 5ம் தேதி சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். 

இந்நிலையில் எஸ்பிபி அவர்களின்  உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என்ற செய்தி பரவியது. இதனையடுத்து அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டு சிகிச்சைபெற்று வந்தார்.

SPB

மேலும் எஸ்பிபி விரைவில் நலம் பெற வேண்டும் என திரையுலக பிரபலங்கள் பலரும் பிராத்தனை செய்து வந்த நிலையில் தற்போது அவரின் இதயத்துடிப்பு மற்றும் இரத்த அழுத்தம் சீராக இருப்பதாகவும், கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் நெகட்டிங் என வந்துள்ளதாகவும் எஸ்பிபி சரண் புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மேலும் எஸ்பிபி கொரோனாவிருந்து மீண்டு வந்தாலும் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். மேலும் எஸ்.பி. பாலசுப்ரமணியத்திற்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி என்று எஸ்.பி.பி. சரண் தெரிவித்துள்ளார்.