எல்லாம் பறிபோய்விட்டது!. எல்லா இடத்துலயும் துரத்துறாங்க, புலம்பித்தள்ளும் சின்மயி!.

எல்லாம் பறிபோய்விட்டது!. எல்லா இடத்துலயும் துரத்துறாங்க, புலம்பித்தள்ளும் சின்மயி!.



sinmayi talking very sadly


பாடகி சின்மயி, பாடும் வாய்ப்பு மற்றும் பின்னணி குரல் கொடுக்கும் வாய்ப்புகள் பறிபோய்விட்டது என பிரபல பத்திரிகை ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார். சின்மயி கூறுகையில், " மாதத்துக்கு 10 முதல் 15 பாடல்கள் பாட வாய்ப்பு கிடைக்கும். அவற்றில் குறைந்தது 5 பாடல்கள் தமிழில் இருக்கும்.

ஆனால், தற்போது எனது பாடல் வாய்ப்புகள் பறிபோயிருக்கின்றன. அதோடு, படங்களுக்கு டப்பிங் பேசும் வாய்ப்பும் இல்லை. டப்பிங் ஆர்ட்டிஸ்ட் யூனியனிலிருந்து என்னை நீக்கிவிட்டார்கள். அதனால் அந்த வாய்ப்பும் பறிபோய்விட்டது.

sinmayi

பெண்களுக்கு வேலை பார்க்கும் இடத்தில் துன்புறுத்தல் என்றால்தான் வழக்கு பதிவு செய்ய முடியும் என்ற நிலை இருக்கிறது. ஆனால், சினிமா தொழிலாளர்களான நாங்கள் பிரீலான்சர் என்ற பட்டியலில்தான் இருக்கிறோம். எனவே இதற்கான புதிய சட்டம் வேண்டும் என கூறியுள்ளார்.