BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
நடிகை சிம்ரனின் திருமணத்திற்கு முன்னதான காதல் கதைகள்.. சர்ச்சையை கிளப்பிய பிரபலம்.?
சிம்ரன் என்றதும் நம் நினைவுக்கு வருவது சிம்ரனின் நடனம் தான். 90களில் சிம்ரன் நடனத்திற்கு மயங்காத ரசிகர்களே இல்லை. அவ்வாறு தனக்கென ஒரு தனி பாணியில் ரசிகர்களின் மனதில் நீங்க இடம் பிடித்தவர்.

சிம்ரன் பல முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்திருக்கிறார். மேலும் ஃபிலிம்பேர், போன்ற பல அவார்டுகளையும் பெற்றுள்ளார். பலரின் கனவு கன்னியாக இருந்த சிம்ரன் ஹிந்தி, ஆங்கிலம், தமிழ் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
இவ்வாறு புகழின் உச்சத்தில் இருந்த சிம்ரனுக்கு தீபக் பாகா என்பவருடன் திருமணம் நடந்தது. இத்தம்பதிக்கு ஆதிக், ஆதித் என்ற இரு மகன்களும் உள்ளனர். ஆனால் சிம்ரனுக்கு திருமணத்திற்கு முன் மூன்று காதல்கள் இருந்தன என்று பிரபல பத்திரிக்கையாளர் பேட்டியில் கூறியிருக்கிறார்.

அவர் கூறியதாவது, "நடிகர் அப்பாசுடன் ஒருதலை காதல், பின் பிரபுதேவாவின் சகோதரர் ராஜசுந்தரத்துடன் ஏற்பட்ட அந்தக் காதல் திருமணம் வரை சென்றதாக கூறப்படுகிறது. மேலும் நடிகர் கமல்ஹாசனுடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பிலும் இருந்துள்ளார்". தற்போது இந்த விஷயங்களை பற்றி பேசியிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.