தயவுசெய்து பீதியை கிளப்பாதீங்க! உருக்கமான கோரிக்கையுடன் சிம்ரன் வெளியிட்ட பரபரப்பு வீடியோ!

தயவுசெய்து பீதியை கிளப்பாதீங்க! உருக்கமான கோரிக்கையுடன் சிம்ரன் வெளியிட்ட பரபரப்பு வீடியோ!



simran-post-video-about-corono-virus

சீனாவில் வுஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது 100க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் அதிதீவிரமாக பரவி வருகிறது. மேலும் உயிரைக் குடிக்கக்கூடிய இந்த கொடிய வைரசால் உலக நாடுகளில் இதுவரை 6000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு, தீவிரமாக  கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்த கொடிய  கொரோனா வைரஸ் இந்தியாவிலும் தீவிரமாக பரவி வருகிறது. இந்தியாவில் இதுவரை 110க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Coronovirus

இந்நிலையில் நடிகை சிம்ரன் கொரோனா வைரஸ் குறித்து கோரிக்கை விடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர், சமீபகாலமாக கொரோனா வைரஸ் குறித்து ஏராளமான தகவல்கள் பரவி வருகிறது. அவை அனைவரையும் பெருமளவில் அச்சுறுத்துகிறது. சிறந்த குடிமகனாக கொரோனா வைரஸை தடுக்க அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். யாரும் பீதியடைய வேண்டாம். வீண் வதந்திகளை பரப்பி பீதியை கிளப்ப வேண்டாம்.  அனைவரும் அடிக்கடி கைகளை கழுவி, மிகவும் ஆரோக்கியமான சுத்தத்தை கையாளவேண்டும். வெளியே செல்லும் போது மாஸ்க் அணிய வேண்டும். கவனமாகவும் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.