நடிகை ஸ்ரேயா தனது மகளுக்காக வாழ்க்கையில் எடுத்துள்ள முக்கிய முடிவு! அதனால் குவிந்து வரும் பாராட்டுக்கள்...

நடிகை ஸ்ரேயா தனது மகளுக்காக வாழ்க்கையில் எடுத்துள்ள முக்கிய முடிவு! அதனால் குவிந்து வரும் பாராட்டுக்கள்...


Shreya life daugter

தமிழ் சினிமாவில் எனக்கு 20 உனக்கு 18 என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை ஸ்ரேயா சரண் அவர் நடித்த முதல் படமே ரசிகர்களிடயே நல்ல வரவேற்பை பெற்று தந்தது.

அதனைத்தொடர்ந்து இவர் விஜய், விக்ரம், விஷால், தனுஷ், ஜிவா போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். மேலு‌ம் இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் போன்ற பல மொழி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு ரஷ்யாவை சேர்ந்த ஆண்ட்ரி என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் ரேயாவிற்கு கடந்த லாக்டவுனில் குழந்தை பிறந்த நிலையில், சமீபத்தில் தான் தன் குழந்தையை ஷ்ரேயா வெளி உலகத்திற்கு காட்டினார்.

இந்நிலையில் மகள் ராதாவுக்காக தன் சினிமா  பயணத்தில் முக்கிய முடிவு ஒன்றை ஷ்ரேயா எடுத்துள்ளார். இந்நிலையில் சினிமாவில் மீண்டும் ரீஎன்ட்ரி கொடுப்பது பற்றி பேசியுள்ள ஷ்ரேயா, நான் நடிக்கும் திரைப்படங்களை பார்த்து என் மகள் பெருமை படவேண்டும். அது போன்ற திரைப்படங்களை மட்டுமே இனி தேர்வு செய்து நடிப்பேன் என ஷ்ரேயா கூறியுள்ளார். இதனை  அறிந்த ரசிகர்கள் பலர் இவரின் முடிவுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.