சீமானால் 8 முறை கருக்கலைப்பு செய்த விஜயலட்சுமி.. பத்திரிக்கையாளர் சந்திப்பில் சீமானின் பரபரப்பு பேச்சு.!

சீமானால் 8 முறை கருக்கலைப்பு செய்த விஜயலட்சுமி.. பத்திரிக்கையாளர் சந்திப்பில் சீமானின் பரபரப்பு பேச்சு.!



Seeman and vijayalakshmi pressmeet

1997ம் ஆண்டு "நாகமண்டலா" என்ற கன்னடப் படத்தில் அறிமுகமானவர் விஜயலட்சுமி.  தொடர்ந்து கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் நடித்து வந்த இவர், தமிழில் "பூந்தோட்டம்" என்ற படத்தில் அறிமுகமானார்.

seeman

இதையடுத்து 2001ம் ஆண்டு விஜய் மற்றும் சூரியா நடித்த "ப்ரண்ட்ஸ்" திரைப்படத்தில் தன் எதார்த்தமான நடிப்பால் அனைவரையும் கவர்ந்தார். 2006ம் ஆண்டில் தன்னை திருமணம் செய்துகொள்ளக் கூறி உதவி இயக்குனர் ஒருவர் துன்புறுத்தியதால், விஜயலட்சுமி தற்கொலைக்கு முயன்றார்.

2011ம் ஆண்டு சீமான், தன்னைத் திருமணம் கொள்வதாக கூறி, தன்னுடன் உறவில் இருந்து, பின்னர் ஏமாற்றிவிட்டதாக போலீசில் புகார் அளித்தார். பின்னர் புகாரை வாபஸ் பெற்ற நிலையில், கடந்த மாதம் மீண்டும் அந்த புகாரின் மேல் நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்தார்.

seeman

இந்நிலையில், மீண்டும் அந்தப் புகாரை வாபஸ் பெறுவதாக விஜயலட்சுமி போலீசில் கூறியுள்ளார். இதனைதொடர்ந்து அவரளித்த பேட்டியில், "இந்த வழக்கில் எனக்கு போதிய ஆதரவு கிடைக்கவில்லை. சீமானை ஒன்றும் செய்ய முடியாது. என் தோல்வியை ஒப்புக்கொள்கிறேன்" என்று விஜயலட்சுமி கூறியுள்ளார். இதன்பின் பத்திரிகையாளர்களை சந்தித்தால் சீமான் 13 ஆண்டுகள் நான்தான் இரண்டு பெண்களால் வன்கொடுமைக்கு ஆளாகினேன் விஜயலட்சுமி பலமுறை கற்பழிப்பு செய்தார் என்று கூறுவதெல்லாம் சுத்த பொய் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.