கனவு கன்னி, கவர்ச்சி புயல் சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையில் இப்படியொரு மர்மமா? ரகசியத்தை அம்பலப்படுத்திய பிரபல இயக்குனர்.!

கனவு கன்னி, கவர்ச்சி புயல் சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையில் இப்படியொரு மர்மமா? ரகசியத்தை அம்பலப்படுத்திய பிரபல இயக்குனர்.!


secret of silk smita dead

இளைஞர்களின் கனவு கன்னியாக இருந்தவர் பிரபல கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதா. இவர் 1996 ல் செப்டம்பர் 23 ல் அவர் தற்கொலை செய்துகொண்டதாக செய்தி வெளியானது. ஆனால் இப்போது வரை அவரின் மரணம் மர்மமாக தான் உள்ளது. இந்நிலையில் சில தினங்களுக்கு அவருக்கு நினைவு நாள் வந்தது.

இந்நிலையில் தற்போது சில்க் ஸ்மிதா  தற்கொலை செய்து கொள்ளவில்லை இயக்குனர் திருப்பதி ராஜன்  கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது நான் என்னுடைய வீணையும் நாதமும் படத்திற்காக ஹீரோயின் தேடிக்கொண்டிருந்த போடு எனது நண்பர் இந்த விஜய லட்சுமியை அதாவது சில்க் ஸ்மிதாவை  அறிமுகப்படுத்தினார். 

அவருக்கு நான் தான் ஸ்மிதா என பெயர் வைத்தேன். அப்போதே வினு சக்கரவர்த்தி உள்ளிட்ட மூன்று பேர் ஸ்மிதாவை நடிக்க வைக்க அவரிடம் கேட்டனர்.

பின்னர் அவர்  வண்டிச்சக்கரம் என்ற படத்தில் சில்க் ரோலில் நடித்ததால் சில்க் ஸ்மிதா என அவர் அழைக்கப்பட்டார் . பின் பிரபல நடிகையாக மாறி புகழின் சிகரத்தில் இருந்த அவர் பிறகு என்னை மறந்துவிட்டார். அதனால் நானும் அவர் மீது கோபத்தில் இருந்துவிட்டேன். 

இந்நிலையில் அவர் இறப்பதற்கு 10 நாட்களுக்கு முன் அவர் என்னை பார்க்க விரும்புவதாக போன்கால் வந்தது.

கோபத்தில் முதலில் நான் போகவில்லை. பின்னர்  சில நாட்கள் கழித்து  அவரை படப்பிடிப்பில் சந்தித்தேன். என்னிடம் கண்ணீர் விட்டு அழுதார். அவர் ஏதோ பிரச்சனையில் இருக்கிறார் என்பது தெரிந்தது. அப்போது தாடிக்காரர் ஒருவர் அவருக்கு ஆதரவாக இருப்பதை அறிந்தேன். சில்க் சில நாட்கள் அரசியல்வாதிகளின் பிடியிலும்  இருந்தார்.

ஆனால் அவர் இறந்தது தற்கொலையால் அல்ல. கடைசி காலகட்டத்தில் பல துன்பங்களை அனுபவித்தார்.அவரை வைத்து பணம் சம்பாதித்து விட்டு இறுதி நேரத்தில் கையில் காசு கூட கொடுக்காமல் அவரை தெருவில் விட்டு விட்டனர்.தான் இறந்து போகப்போகிறோம் என்பது 10 நாட்களுக்கு முன்பே அவருக்கு தெரியும். 

மேலும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் கடைசியாக சில்க் இருந்த போது அவருக்கு யார் என்ன கொடுமைகள் செய்தார்கள் என்பது பலருக்கும் தெரியும். அவரின் வாழ்க்கையை நான் புத்தகமாக எழுதி வருகிறேன் எனவும் கூறியுள்ளார்.