பாடகர் எஸ்.பி.பியின் உடல்நிலை தற்போது எப்படியுள்ளது? அவரது மகன் எஸ்.பி. சரண் வெளியிட்ட மகிழ்ச்சியான தகவல்!

பாடகர் எஸ்.பி.பியின் உடல்நிலை தற்போது எப்படியுள்ளது? அவரது மகன் எஸ்.பி. சரண் வெளியிட்ட மகிழ்ச்சியான தகவல்!


sb-charan-video-about-spb-health-issue

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர் கடந்த மாதம் 5ம் தேதி சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.

அதனை தொடந்து செயற்கை சுவாச கருவிகள் மற்றும் எக்மோ உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் எஸ்.பி.பியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது.  

SPB

இந்த நிலையில் பாடகர் எஸ்.பி.பியின் உடல்நிலை குறித்து அவரது மகன் எஸ்.பி.சரண் அவ்வப்போது தகவல் வெளியிட்டு வருகிறார். மேலும் அவர் இதற்கு முன் வெளியிட்ட அறிக்கையில், எஸ்.பி.பியின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவர் சிறிது பேச தொடங்கியுள்ளார். முழுவதும் சுயநினைவு திரும்பிவிட்டது. அவருக்கு பிஸியோதெரபி சிகிச்சை நடைபெறுகிறது.
மேலும் மருத்துவர்களின் உதவியுடன் 15-20 நிமிடங்கள் உட்கார்ந்து இருந்தார். அவர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளார் என கூறியிருந்தார். 

அதனை தொடர்ந்து நேற்று தந்தை எஸ்.பி.பியின் உடல்நிலை குறித்து எஸ்.பி.சரண் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், எனது அப்பா விரைந்து குணமடைந்து வருகிறார். அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் உள்ளது. அவர் நேற்றில் இருந்து உணவு எடுத்துக் கொள்கிறார். 
அவருக்கு மருத்துவக்குழு தொடர்ந்து தீவிர சிசிச்சை அளித்து வருகிறது என கூறியுள்ளார். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.