குழந்தை பிறந்தபின் நடிகை சாயிஷா எப்படியுள்ளார் பார்த்தீங்களா! நீண்ட நாட்களுக்கு பின் வெளிவந்த புகைப்படம்!!

குழந்தை பிறந்தபின் நடிகை சாயிஷா எப்படியுள்ளார் பார்த்தீங்களா! நீண்ட நாட்களுக்கு பின் வெளிவந்த புகைப்படம்!!



sayeesha-latest-photo-viral

தமிழ் சினிமாவில் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த வனமகன் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை சாயிஷா. அதனைத் தொடர்ந்து அவர் கடைக்குட்டி சிங்கம், ஜூங்கா, கஜினிகாந்த், காப்பான் என தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார். 

இதற்கிடையில் சாயிஷா கஜினிகாந்த் படத்தில் நடித்தபோது அந்த படத்தில் ஹீரோவாக நடித்த ஆர்யாவுடன் காதலில் விழுந்தார். பின்னர் இருவரும் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். மேலும் அண்மையில் ஆர்யா, சாயிஷா தம்பதியினருக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில் குழந்தை பிறந்த பின், நீண்ட நாட்களுக்கு பிறகு சாயிஷா முதன்முதலாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அது இணையத்தில் வைரலாகி வருகிறது.