விஜயகாந்துக்காக வடிவேலு இதையாவது செய்திருக்கலாம் - சரத்குமார்!

விஜயகாந்துக்காக வடிவேலு இதையாவது செய்திருக்கலாம் - சரத்குமார்!



Sarathkumar speech about vijayakanth and vadivel

தமிழ் சினிமாவின் பிரபல நடிகரும், தேமுதிக அரசியல் கட்சி தலைவருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28ஆம் தேதி காலமானார் அவரது மறைவு திரை பிரபலங்களுக்கும் அவரது ரசிகர்களுக்கும் பெரும் இழப்பு என்று அரசியல் தலைவர்கள் மற்றும் திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்திருந்தனர்.

vijayakanth

இதனையடுத்து கேப்டன் விஜயகாந்த் உடல் தேமுதிக தலைமை அலுவலகத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இதனையடுத்து கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்தில் பொதுமக்களும் திரையுலக பிரபலங்கள் பலரும் தினமும் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழ் திரையுலகம் சார்பில் நேற்று சென்னை காமராஜர் அரங்கத்தில் மறைந்த நடிகர் விஜயகாந்திற்கு நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திரைப்பட நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் பங்கேற்றனர்.

அப்போது பேசிய நடிகர் சரத்குமார், இப்படி ஒரு நினைவேந்தல் கூட்டத்தில் நான் கலந்து கொள்வேன் என்று எதிர்பார்க்கவில்லை. கேப்டன் விஜயகாந்த் மறைவு தமிழகத்திற்கு மாபெரும் இழப்பு.

vijayakanth

90களில் நான் சரிவை சந்தித்துக் கொண்டிருந்தபோது விஜயகாந்தின் படங்களில் வில்லனாக அடிக்க வேண்டும் என்பதற்காக மீசை எடுத்தேன். தற்போதும் மீசை எடுத்துள்ளேன். விஜயகாந்த் மறைவிற்கு வடிவேலு வராமல் வீட்டிலேயே அழுதிருக்கலாம். கேப்டன் விஜயகாந்த் யாரையும் எதிர்த்து குறை கூறும் நபர் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.