பாடகர் எஸ்.பி.பியின் உடல்நிலை கவலைக்கிடமா? அவரது மகன் சரண் அளித்த விளக்கம்!

பாடகர் எஸ்.பி.பியின் உடல்நிலை கவலைக்கிடமா? அவரது மகன் சரண் அளித்த விளக்கம்!



saran-explain-about-his-father-health-condition

பிரபல பின்னணி பாடகர் எஸ். பி.பாலசுப்ரமணியனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர் கடந்த 5ம் தேதி சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். 

இந்நிலையில் எஸ்பி பாலசுப்ரமணியன் உடல்நிலை மோசமடைந்து கவலைக்கிடமாக உள்ளது. அதனைத் தொடர்ந்து மருத்துவ நிபுணர்களின் அறிவுரையின்படி அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு செயற்கைசுவாசம் பொருத்தப்பட்டு  தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என மருத்துவமனை நிர்வாகம் இன்று அறிக்கை வெளியிட்டது. 

SPB

அதனை தொடர்ந்து திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் அவர் நல்லபடி குணமடைந்து மீண்டு வர வேண்டும் என பிரார்த்தனைகள் மேற்கொண்டுவருகின்றனர். இந்நிலையில், பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை குறித்து அவரது மகன் எஸ்.பி.பி.சரண் விளக்கம் அளித்துள்ளார். அதில் எஸ்.பி.பி.யின் உடல்நிலை அச்சப்படும் அளவிற்கு  மோசமாக இல்லை. நலமாகவே இருக்கிறார் என்று கூறியுள்ளார்.