மறைந்த நடிகர் சேதுராமனுக்காக, அவரது பிறந்தநாளில் நடிகர் சந்தானம் செய்த நெகிழ்ச்சி காரியம்! வாழ்த்தும் ரசிகர்கள்!

மறைந்த நடிகர் சேதுராமனுக்காக, அவரது பிறந்தநாளில் நடிகர் சந்தானம் செய்த நெகிழ்ச்சி காரியம்! வாழ்த்தும் ரசிகர்கள்!


Santhanam opened actor sethuraman hospital

தமிழ் சினிமாவில் கண்ணா லட்டு திங்க ஆசையா என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் நடிகர் சேதுராமன். இவர் அதனைத்தொடர்ந்து வாலிபராஜா, சக்கபோடு போடு ராஜா உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

மருத்துவரான இவர் தனது 36 வயதில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இப்பொழுது ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் அவரது மனைவி உமையாள் கர்ப்பமாக இருந்தார். அவருக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் ஆண்குழந்தை பிறந்தது. இந்நிலையில் சேதுராமன் இறப்பதற்கு முன், ஈ.சி.ஆர் சாலையில் மருத்துவமனை ஒன்றை கட்டி வந்துள்ளார். 

 அதன் பணிகள் முடிவடைந்த  நிலையில், மருத்துவமனையை சேதுராமனின் பிறந்த நாளான நேற்று சேதுராமனின் நெருங்கிய நண்பரும், நடிகருமான சந்தானம் திறந்து வைத்துள்ளார்.  அப்பொழுது சேதுராமனின் ஆளுயர கட்அவுட் அருகே நின்று எடுத்த புகைப்படத்தை சந்தானம் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.