கவின், சாண்டிக்கு இடையே ஏற்பட்ட பெரும் விரிசல்.! கண்கலங்கியவாறு கடைசியாக சாண்டி கூறிய ஒத்த வார்த்தை!! ஷாக் வீடியோ இதோ..
கவின், சாண்டிக்கு இடையே ஏற்பட்ட பெரும் விரிசல்.! கண்கலங்கியவாறு கடைசியாக சாண்டி கூறிய ஒத்த வார்த்தை!! ஷாக் வீடியோ இதோ..

பிக்பாஸ் சீசன் மூன்று 80 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும் இன்னும்இறுதி கட்டத்திற்கு இரண்டு, மூன்று வாரங்களே இருக்கும் நிலையில் இந்த முறை பிக்பாஸ் பட்டத்தை வெல்லப்போகும் அந்த பிரபலம் யார் என அறிய ரசிகர்கள் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில் 16 போட்டியாளர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் தற்போது போட்டியாளர்களாக கவின், லாஸ்லியா, சாண்டி, ஷெரின், முகென், தர்சன், சேரன் ஆகியோர் மட்டுமே உள்ளனர். மேலும் ஒவ்வொருவரும் நிகழ்ச்சியில் வெற்றி பெறுவதற்காக தீவிரமாக உழைத்து வருகின்றனர்.
மேலும் இந்த வாரம் முழுவதும் டிக்கெட் டு பினாலே டாஸ்க் நடைபெற்று வருகிறது. அதனை தொடர்ந்து பிக்பாஸ், போட்டியாளர்களுக்கு கடுமையான டாஸ்கை கொடுத்து வருகிறார். இதில் போட்டியாளர்கள் அனைவரும் சுயநலத்துடனும், முழுமூச்சுடனும் கடுமையாக உழைத்து வருகின்றனர்.
மேலும் இத்தகைய டாஸ்க்கால் போட்டியாளர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு வருகிறது. முக்கியமாக இணைபிரியாத சகோதரர்களாக, நண்பர்களாக இருந்த கவினுக்கும் சாண்டிக்கும் இடையே பெரும் விரிசல் ஏற்பட்டது. இந்நிலையில் இதனால் பெரும் வருத்தத்தில் இருக்கும் சாண்டி கவினிடம் இதுகுறித்து கண்ணீர் மல்க பேசியுள்ளார். மேலும் அவர் இறுதியில் கலங்கிய குரலில் என்னை மட்டும் தவறாக நினைத்து விடாதே என்று கூறியுள்ளார். இந்த வீடியோ வெளியாகி வைரலான நிலையில் கவின் ரசிகர்கள் பெரும் வருத்தம் அடைந்துள்ளனர்.