முதன்முதலாக தனது குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட சமீரா!! கியூட் பாப்பாவிற்கு குவியும் லைக்குகள்!!

முதன்முதலாக தனது குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட சமீரா!! கியூட் பாப்பாவிற்கு குவியும் லைக்குகள்!!



sameera reddy post daughter photo

கவுதம் மேனன் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் வெளியான வாரணம் ஆயிரம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சமீரா ரெட்டி. இவர் அப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பிரபலமானார். அதனை தொடர்ந்து அவர் வெடி, வேட்டை, அசல் போன்ற ஒருசில படங்களில் நடித்தார்.

இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற மற்ற மொழி படங்களிலும் நடித்துள்ளார். அதனை தொடர்ந்து அதன்பிறகு சரியான வாய்ப்புகள் அமையாததால் சமீரா 2014ஆம் ஆண்டு அக்‌ஷய் வர்தே என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பின்னர் படங்களில் நடிக்காமல் குடும்ப வாழ்க்கையில் பிஸியானார்.

Sameera reddy

மேலும் அவருக்கு ஏற்கனவே ஒரு மகன் உள்ள நிலையில், சமீராவுக்கு சமீபத்தில் அழகிய பெண்குழந்தை பிறந்துள்ளது.குழந்தைக்கு "நைரா" என பெயர் வைத்துள்ளனர்.  இந்நிலையில்  தற்போது குழந்தை பிறந்து 1 மாதங்கள்  ஆனநிலையில் குழந்தையுடன் தான் இருக்கும் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்து வருகிறது.