கார் பிரேக் வயரை கட் செய்தது யார்! நீங்களா.. மரண பயத்தில் ரோகிணி..! சிறகடிக்க ஆசை புரோமோ.
இதனால்தான் சினிமாவில் நடிக்க வந்தாரா? - சமந்தாவின் உருக்கமான பேட்டி!

தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பின்பு தெலுங்கு, கன்னடா போன்ற மொழிகளிலும் தனது திறமையை வெளிப்படுத்தி உயரிய நிலைக்கு சென்றவர் நடிகை சமந்தா. திருமணத்திற்கு பின்பும் நடிப்பின் மீது இருந்த ஆர்வம் சமந்தாவிற்கு குறையவில்லை.
ஆனால் சமந்தா இந்த சினிமா துறையை தானே ஆசைப்பட்டு தேர்ந்தெடுக்க வில்லை என்பது இப்போது தெரியவந்துள்ளது. காபி வித் கரன் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற சமந்தா தனது குடும்ப சூழல் காரணமாகவே சினிமா துறைக்குள் வர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர் "எங்கள் வீட்டில் இருந்த பொருளாதார நெருக்கடியால் படிப்பினை தொடர முடியவில்லை. மேலும் எனது தந்தை எந்த ஒரு கல்விக் கடனையும் தன்னால் கட்ட முடியாது என கூறிவிட்டார். அவர் சொன்ன அந்த வார்த்தையே என் வாழ்க்கையை மாற்றிவிட்டது" என்ன சமந்தா கூறியுள்ளார்.