செல்பி எடுக்க முயன்ற ரசிகன்! கோபத்தில் சல்மான் கான் செய்த காரியத்தால் கடும் அதிருப்தியில் ரசிகர்கள்!

செல்பி எடுக்க முயன்ற ரசிகன்! கோபத்தில் சல்மான் கான் செய்த காரியத்தால் கடும் அதிருப்தியில் ரசிகர்கள்!



salman-khan-snatches-mobile-fan-of-fan

பாலிவுட் சினிமாவில் ஏராளமான ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நடிகையாக கொடிகட்டி பறப்பவர் நடிகர் சல்மான் கான். இவருக்கென ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது. 

இந்நிலையில் நடிகர் சல்மான்கான் நடிப்பில் உருவாகும் ராதே படத்தின் படப்பிடிப்பு தற்போது கோவாவில் நடைபெற்று வருகிறது. இதற்காக நடிகர் சல்மான் கான் விமானம் மூலம் கோவா விமான நிலையத்தில் வந்து  இறங்கினார். அப்போது அங்கிருந்த ரசிகர் ஒருவர் சல்மான் கானின் அனுமதியின்றி அவருடன் செல்பி எடுக்க முயன்றுள்ளார். 

Salman khan

இதனை கண்டு கோபமடைந்த சல்மான் கான் அந்த ரசிகரின் செல்போனை பறித்துச் சென்றுவிட்டார். மேலும் அவருடன் வந்த பாதுகாவலரும் ரசிகனை மிரட்டும் வகையில் ஏதோ கூறிவிட்டு சென்றுள்ளனர். இந்த  வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.