நான் இப்படியொரு நிலையில் இருப்பதற்கு தனுஷ் தான் காரணம்" மனம் திறந்த ரோபோ சங்கர்..

நான் இப்படியொரு நிலையில் இருப்பதற்கு தனுஷ் தான் காரணம்" மனம் திறந்த ரோபோ சங்கர்..



robo-sanker-openup-about-dhanush

விஜய் டிவியில் ஒளிபரப்பான 'கலக்கப் போவது யாரு?' நிகழிச்சியின் மூலம் பிரபலமானவர் ரோபோ ஷங்கர். பல குரல்களில் பேசி மிமிக்ரி செய்யும் திறமை கொண்ட ரோபோ ஷங்கர், தமிழ் சினிமாவிலும் காமெடியனாக வலம் வந்தார்.

robo

இதையடுத்து, சில காலங்களாக இவரைப் பற்றிய எந்த ஒரு செய்தியும் இல்லாத நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு, உடல் எடை குறைந்த நிலையில், மிகவும் பலகீனமாக இருப்பதைப் போன்று ரோபோ ஷங்கரின் புகைப்படங்கள் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இந்நிலையில், தீவிர குடிப்பழக்கம் காரணாமாக, மஞ்சள் காமாலை நோயினால் தீவிரமாக பாதிக்கப்பட்டதாக ரோபோ ஷங்கர் தெரிவித்திருந்தார். தற்போது ஒரு பேட்டியில் ரோபோ ஷங்கர், " மாரி படத்தில் நடித்த போது எனக்கும், தனுஷுக்கும் குடிப்பழக்கம் இருந்தது.

robo

நான் மிகவும் அதிகமாக குடிக்கும் பழக்கம் உடையவன். ஆனால் தனுஷ் எப்போதாவது பார்ட்டிக்களில் மட்டும் குடிக்கும் பழக்கமுடையவர். அவரும் குடிப்பழக்கத்தை கைவிட்டு, என்னையும் குடிப்பதை நிறுத்தச் சொன்னார் தனுஷ்" என்று ரோபோ ஷங்கர் கூறியுள்ளார்.