வெளிவந்தது சிம்பு, நயன்தாரா காதல் முறிவுக்கான காரணம்! ஒரு கேமராவால் மாறிப்போன வாழ்க்கை!

வெளிவந்தது சிம்பு, நயன்தாரா காதல் முறிவுக்கான காரணம்! ஒரு கேமராவால் மாறிப்போன வாழ்க்கை!



reason-for-simbu-and-nayanthaara-breakup

பிரச்சனை என்றாலே நடிகர் சிம்பு என்றாகிவிட்டது தமிழ் சினிமாவில். எதையும் வெளிப்படையாக பேசும் சிம்புவிற்கு அதுவே பல நேரங்களில் பிரச்சனையாக அமைகிறது. 

இந்நிலையில் நடிகை நயன்தாராவும், சிம்புவும் காதலித்து வந்தது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் அவர்கள் இருவரும் தற்போது பிரிந்துவிட்டனர். அதன் பிறகு சிம்பு நடிகை ஹன்சிகாவை காதலித்தார் அனால் அந்த காதலும் தோல்வியில் முடிந்தது.

நடிகை யந்தாரா அதன்பின்பு நடிகர் பிரபுதேவாவை காதலித்து பின்பு இருவரும் பிரிந்துவிட்டனர். தற்போது நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை தீவிரமாக காதலித்து வருகிறார்.

இதெல்லாம் ஒருபுறம் இருக்க முதலில் காதலித்த சிம்புவம் நயன்தாராவும் ஏன் பிரிந்தார்கள், அவர்கள் மறைமுகமாக செய்த லிப் லாக் கிஸ் புகைப்படம் வெளியானது எப்படி என்ற தகவல் கிடைத்துள்ளது.

nayanthara

இருவரும் நெருக்கமாக இருக்கும் போது எடுத்துக்கொண்ட லிப்-லாக் முத்தம் புகைப்படம் இணைதளத்தில் வைரலாகியது. இதனால் இருவருக்கும் இடையே இருந்த காதல் முறிந்தது.

அந்த நிகழ்வு குறித்து சிம்பு சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியதாவது: ‘துபாயின் புது கேமரா வாங்கிய போது அந்த புகைப்படம் எடுத்தோம், ஆனால், அதை யாரோ லீக் செய்துவிட்டார்கள்.

அந்த நிகழ்வு என்னை மிகவும் பாதித்தது, என்னால் ஒரு பெண் பெயர் கெடுகின்றதே என்று, நான் எந்த பெண்ணிடமும் அவர்கள் அனுமதியில்லாமல் தொட்டது கூட இல்லை’ என்று வருத்தத்துடன் கூறினார் நடிகர் சிம்பு.

புதிதாக வாங்கிய கேமிராவில் இவர்களது காதல் முறிந்தது சற்று வருத்தமாகவே உள்ளது.