ஆந்திரா முதல்வரை கண்டுபிடித்து கொடுத்தால் ஒரு லட்சம் பரிசு! பிரபல இயக்குனர் அதிரடி ட்விட்!

ஆந்திரா முதல்வரை கண்டுபிடித்து கொடுத்தால் ஒரு லட்சம் பரிசு! பிரபல இயக்குனர் அதிரடி ட்விட்!



Ramgopal varma announced one lakh reward

சர்ச்சைக்குரிய இயக்குனர்களில் ஒருவர் ராம் கோபால் வர்மா. ஆந்திர பிரதேச முன்னாள் முதல்வர் என்.டி.ஆரின் வாழ்க்கையை சினிமாவாக எடுக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறார் இயக்குநர் ராம் கோபால் வர்மா. என்.டி.ஆரின் வாழ்க்கையில் முக்கிய அங்கமான பார்க்கப்படுபவர் தற்போதைய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு. என்.டி.ஆரின் வாழ்க்கை படத்தில் சந்திரபாபு கேரக்டரில் நடிக்க இயக்குனர் ஆள் தேடிக்கொண்டிருக்கும் நிலையில் சந்திரபாபு போலவே இருக்கும் ஒரு நபரின் புகைப்படம் இணையத்தில் வைரலானது.

Ramgopal varma

இரண்டு பாகங்களாக தயாராகி வரும் படத்தில், அவரது இரண்டாவது மகன் நந்தமுரி பாலகிருஷ்ணா கதாநாயகனாக நடித்து வருகிறார். முதலில் இந்த திரைப்படத்தை ராம் கோபால் வர்மா இயக்குவதாக இருந்தது. ஆனால், திரைக்கதையில் பாலகிருஷ்ணா திருப்தி அடையாததால் அவர் கழற்றி விடப்பட்டு கிரிஷ்-க்கு படத்தை இயக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது.


இதனால் ராம் கோபால் வர்மா,என்.டி.ஆரின் முதல் மனைவியான லக்‌ஷ்மியின் வாழ்க்கையை மையப்படுத்தி கதை ஒன்றை உருவாக்கி வருவதாகா தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் தற்போதைய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு போலவே உருவத்தோற்றம் கொண்ட நபர் ஹோட்டலில் சர்வர் வேலை பார்க்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது.

இந்த வீடியோவை தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள ராம் கோபால் வர்மா, “இந்த நபரை உங்களுக்கு தெரியுமானால் என்னை உடனே தொடர்பு கொள்ளுங்கள். அதற்கு பரிசாக ரூ.1 லட்சம் வழங்கப்படும்” என பதிவிட்டு தனது இ-மெயில் முகவரியையும் இணைத்துள்ளார்.