ப்ளீஸ் என்ன மன்னிச்சிடுங்க.! கையசைத்த ரசிகரின் வீட்டிற்கு திடீரென்று சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்த ரஜினிகாந்த்.!



Rajinikanth apologized to the fan's family

இந்திய சினிமாவுலகத்தில் முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்துவரும் ரஜினிகாந்த் எந்த இடத்திற்கு சென்றாலும் தனக்கான பாதுகாப்போடு சென்று வருவார். இருந்தாலும் ஒரு சில நேரங்களில் அவர் பாதுகாவலர்கள் யாருமில்லாமல் தன்னுடைய வெளிப்படையான சைகைகளை  காட்டி எல்லோரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்துவது  போன்று பல்வேறு நேரங்களில் எந்த விதமான பாதுகாப்புமில்லாமல் தன்னுடைய இல்லத்திற்கு அருகே நடை பயிற்சி செய்வதையும் அவர் வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.

rajini

அத்துடன் பல்வேறு சமயங்களில் மாறுவேடமிட்டு,  அவர் இருக்கும் பகுதியில் சுற்றித்திரிவார் என்று சொல்லப்படுகிறது. இருந்தாலும் பொதுமக்கள் பார்வையிலிருந்து விலகி இருந்த சமயத்தில் அவர் ஒரு சாதாரண நபர் போலவே காணப்படுவார். இதனை உறுதிப்படுத்தும் விதத்தில், தற்போது ஒரு வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருவதாக சொல்லப்படுகிறது. அமெரிக்க நாட்டைச் சேர்ந்த ஒரு நபர் ரஜினிகாந்த் குறித்த ஒரு பழைய வீடியோவை வெளியிட்டிருக்கிறார்.

அந்த வீடியோவில் ரஜினி அமெரிக்காவில் வசிக்கும் ஒரு தமிழக குடும்பத்தின் இல்லத்திற்கு நடந்தே செல்கின்றார். அந்த வீட்டிலிருப்பவர்கள் ரஜினியை பார்த்தவுடன், கையசைக்கிறார்கள். இதன்பின் திடீரென்று ரஜினி அவர்களின் வீட்டிற்கு செல்ல வேண்டும் என தெரிவித்தபோது அனைவரும் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். பின்னர் அவரை உள்ளே அழைத்தவுடன், மன்னித்து விடுங்கள் நான் உங்கள் தூக்கத்தை கெடுத்து விட்டேன் என்று ரஜினிகாந்த் தெரிவித்திருக்கிறார். மேலும் அனைத்தும் நன்றாகத்தான் இருக்கிறது என்றும் தெரிவிக்கின்றார்.

rajini

ஆனால், ரஜினி இப்படியொரு   பயணத்தை பலமுறை மேற்கொண்டிருக்கிறார். சில மாதங்களுக்கு முன்னர் ரஜினி அவர் நடத்துனராக பணிபுரிந்த பெங்களூரு நகரத்திலிருக்கின்ற பேருந்து நிலையத்திற்கு சென்றுள்ளார்.

அங்குள்ள டிப்போ ஊழியர்கள் எல்லோரும் இவரை பார்த்தவுடன் உற்சாகமடைந்தனர். பின்பு அவர் வீடு திரும்புவதற்கு முன்னால் சற்று நேரம் அங்கே மகிழ்ச்சியாக இருந்தார். தற்சமயம் ரஜினி இயக்குனர் டி.ஜே ஞானவேல் இயக்கத்தில், தன்னுடைய 170 வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில், டக்பதி, மஞ்சு வாரியர், ராணா, பகத் பாசில், அமிதாப்பச்சன் உள்ளிட்டோரும்  நடித்துள்ளனர். இந்த திரைப்படம் எதிர்வருமாண்டில் திரையரங்குகளுக்கு வரும் என்று சொல்லப்படுகிறது.