அரசியலுக்கு முழுக்கு போட்ட கையோடு ரஜினிகாந்த் மேற்கு வங்காளம் பயணம்.! என்ன காரணம் தெரியுமா.?

அரசியலுக்கு முழுக்கு போட்ட கையோடு ரஜினிகாந்த் மேற்கு வங்காளம் பயணம்.! என்ன காரணம் தெரியுமா.?



rajini-will-go-to-west-bengal

நீண்ட நாள்களுக்குப் பிறகு நடிகர் ரஜினிகாந்த் மாவட்ட செயலாளர்களுடனான முதல் சந்திப்பு நேற்று நடந்தது. ரஜினி மக்கள் மன்றத்தின் 38 மாவட்ட செயலாளர்களுடன் நடிகர் ரஜினிகாந்த் கலந்தாலோசனை நடத்தினார். கோடம்பாக்கம் ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு வருகை தருமாறு அவர்களுக்கு அழைப்பு விடப்பட்டது.

இந்த ஆலோசனைக்கு பின்னர் நடிகர் ரஜினிகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில்,ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கும், உறுப்பினர்களுக்கும், என்னை வாழவைத்த தெய்வங்களான ரசிக பெருமக்களுக்கும் வணக்கம். நான் அரசியலுக்கு வர முடியவில்லை என்று சொன்ன பிறகு ரஜினி மக்கள் மன்றத்தின் பணி என்ன நிலை என்ன? என்று மக்கள் மன்ற நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் கேள்விக்குறியாக இருக்கிறது.  அதனை விளக்க வேண்டியது என்னுடைய கடமை.

நான் அரசியல் கட்சி ஆரம்பித்து அரசியலில் ஈடுபட ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றத்தை ரஜினி மக்கள் மன்றம் ஆக மாற்றி, மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் பல உதவிகளையும், பல சாதனைகளையும் உருவாக்கினோம்.

rajini

கால சூழலால் நம் எண்ணம் சாத்தியப்படவில்லை. வருங்காலத்தில் அரசியலில் ஈடுபட போகும் எண்ணம் எனக்கில்லை. ஆகையால் ரஜினி மக்கள் மன்றத்தை கலைத்து விட்டு சார்ந்த பணிகள் எதுவும் இன்றி இப்போதைக்கு ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ள செயலாளர்கள், இணை, துணை செயலாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களுடன் மக்கள் நல பணிக்காக முன்புபோல ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றமாக செயல்படும் என்று அன்புடன் தெரிவித்து கொள்கிறேன். வாழ்க தமிழ் மக்கள்! வாழ்க தமிழ்நாடு! ஜெய்ஹிந்த் என குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் நாளை மேற்கு வங்காளத்திற்கு பயணம் மேற்கொள்கிறார். அண்ணாத்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக ரஜினி நாளை மேற்கு வங்கத்திற்கு புறப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அங்கே அவர் நான்கு நாட்கள் தங்கி இருந்து அண்ணாத்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார்.