ராஜா ராணி 2 சீரியலில் இருந்து திடீரென வெளியேறிய ஆல்யா மானசா...! என்ன காரணம் தெரியுமா..?அவருக்கு பதில் புதிய சந்தியாவின் புகைப்படம் இதோ...!

ராஜா ராணி 2 சீரியலில் இருந்து திடீரென வெளியேறிய ஆல்யா மானசா...! என்ன காரணம் தெரியுமா..?அவருக்கு பதில் புதிய சந்தியாவின் புகைப்படம் இதோ...!



raja-rani-2-new-santhiya-character

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி தற்போது விறுவிருப்பாகவும், சுவாரஸ்யமாகவும் சென்று கொண்டிருக்கும் தொடர் ராஜா  ராணி2. இத்தொடருக்கென ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு உள்ளது. இந்த சீரியலில் சரவணன் என்ற கதாபாத்திரத்தில் சித்து நடிக்கிறார். சந்தியா என்ற கதாபாத்திரத்தில் ஆலியா நடிக்கிறார்.

ஆலியா மானசா ராஜாராணி முதல் பாகத்திலும் ஹீரோயினாக நடித்தார். மேலும் அதில் ஹீரோவாக கார்த்திக் என்ற கதாபாத்திரத்தில் சஞ்சீவ் நடித்தார். சீரியலில் கணவன்,மனைவியாக நடித்த இருவரும் நிஜத்திலும் காதலித்து  திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு ஐலா என்ற அழகிய மகள் உள்ளார்.

இந்த நிலையில் ஆலியா தற்போது இரண்டாவது முறையாக கர்ப்பமாக உள்ளார். இந்நிலையில் அவருக்கு இந்த மாத இறுதியில் குழந்தை பிறந்துவிடும் என்பதால் அவர் சிறிது  காலம் சீரியலில்  நடிப்பதை   நிறுத்தியுள்ளார். குழந்தை பிறந்து சில மாதங்களுக்கு பிறகு மீண்டும் ஆல்யா, சந்தியா கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்குவாராம். தற்போது நடிகை ஆல்யா மானசா பதிலாக புதியதாக சந்தியா வேடத்தில் நடிக்க ஒரு நடிகை வந்துள்ளார். இதோ  அவரது  புகைப்படம்...Santhiya