இனி என் அறக்கட்டளைக்கு யாரும் நன்கொடை வழங்கவேண்டாம்! நடிகர் ராகவா லாரன்ஸ் வேண்டுகோள்! என்ன கூறியுள்ளார் பார்த்தீங்களா!!

இனி என் அறக்கட்டளைக்கு யாரும் நன்கொடை வழங்கவேண்டாம்! நடிகர் ராகவா லாரன்ஸ் வேண்டுகோள்! என்ன கூறியுள்ளார் பார்த்தீங்களா!!



Ragava lawrence request todont swnd money to his trust

தமிழ் சினிமாவில் நடன இயக்குனர், நடிகர் என பன்முகத்திறமை கொண்டு விளங்கும் ராகவா லாரன்ஸ் தற்போது சந்திரமுகி 2 படத்தில் நடித்து வருகிறார். மேலும் அவரது கைவசம் ருத்ரன், அதிகாரம், துர்கா போன்ற படங்கள் உள்ளன. சந்திரமுகி 2 படத்திற்காக ராகவா லாரன்ஸ் தனது உடலமைப்பை பெருமளவில் மாற்றியுள்ளார்.

இந்த நிலையில் தற்போது அவர் தனது சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்ட பதிவில், அனைவருக்கும் வணக்கம், நான் இரு விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். முதலில், சந்திரமுகி 2விற்காக நான் எனது உடலை மாற்றிக் கொள்ள எடுக்கும் சிறு முயற்சியை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இந்த மாற்றத்தை கொண்டு வந்த எனது பயிற்சியாளர் சிவா மாஸ்டருக்கு மிக்க நன்றி.

ragava lawrence

இரண்டாவதாக, இத்தனை ஆண்டுகளாக என் அறக்கட்டளைக்கு ஆதரவளித்த அனைத்து நன்கொடையாளர்களுக்கும் நன்றி சொல்ல ஆசைப்படுகிறேன். எனக்கு தேவைப்படும் போதெல்லாம் உங்கள் உதவியை பெற்று என்னால் முடிந்த உதவிகளை அறக்கட்டளை மூலம் பலருக்கும் செய்துள்ளேன். இனி எனது அறக்கட்டளைக்கு யாரும் பணத்தை நன்கொடையாக வழங்க வேண்டாம். தற்போது நான் நல்ல இடத்தில் உள்ளேன்.  பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளேன். எனவே, மக்களுக்கு சேவை செய்யும் முழு பொறுப்பையும் நானே ஏற்க முடிவு செய்துள்ளேன். அதற்கு மாறாக உங்களது ஆசீர்வாதம் எனக்கு போதும். இத்தனை ஆண்டுகளாக எனக்கு கிடைத்த ஆதரவுக்கும் அன்புக்கும் நான் நன்றியுள்ளவனாக இருப்பேன் என தெரிவித்துள்ளார்.