என்னம்மா கடைசியில மாடு மேய்க்க அனுப்பிட்டாங்களா! தொகுப்பாளினி பிரியங்கா வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்.

என்னம்மா கடைசியில மாடு மேய்க்க அனுப்பிட்டாங்களா! தொகுப்பாளினி பிரியங்கா வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்.



priyanka-latest-photo

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் கடந்த ஆறு வருடங்களாக தொகுப்பாளினியாக பணியாற்றி வருபவர் பிரியங்கா. இவர் விஜய் டிவியில் வரும் அனைத்து ஷோவையும் தொகுத்து வழங்கி வருகிறார். 

ஒவ்வொரு ஷோவிலும் இவர் செய்யும் காமெடி ரசிக்க கூடியதாக இருந்தாலும் பல சமயத்தில் பிறரை கிண்டல் செய்வது மக்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தும். ஆனால் இவரின் சிரிப்புக்கு என்றே தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

மேலும் இவர் சூப்பர் சிங்கர் ஜூனியர், சீனியர் 5,6,7 மற்றும் ஸ்டார்ட் மியூசிக் தற்போது புதிதாக துவங்கப்பட்ட தி வால் போன்ற நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாகவும், கலக்கப்போவது யாரு 5,6,7 யின் நடுவராகவும் பணியாற்றியுள்ளார்.

priyanka

இந்நிலையில் சமீபத்தில் முடிவடைந்த சூப்பர் சிங்கர் சீனியர் போட்டியின் வெற்றி விழாவை கொண்டாட சூப்பர் சிங்கர் குழுவுடன் இன்ப சுற்றுலா சென்றுள்ளார். அப்போது அங்கு எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதனை பார்த்த நெட்டிசன்கள் அவரை வெச்சு செய்துள்ளனர். அதாவது என்ன பிரியங்கா உங்களை கடைசியில் மாடு மேய்க்க அனுப்பிவிட்டார்களா! என்றெல்லாம் பலவிதமான கமெண்ட்டுகளை செய்துள்ளனர்.


View this post on Instagram

12hrs of PEACE ☮️ #supersinger7 #itsawrap 🤟🏽

A post shared by Priyanka Deshpande (@priyankapdeshpande) on