இது யாருக்கு வேணாலும் நடக்கலாம்.. ப்ளீஸ் கவனமா இருங்க! உருக்கமாக நடிகை பிரியா பவானி சங்கர் வெளியிட்ட பதிவு!!

இது யாருக்கு வேணாலும் நடக்கலாம்.. ப்ளீஸ் கவனமா இருங்க! உருக்கமாக நடிகை பிரியா பவானி சங்கர் வெளியிட்ட பதிவு!!


priyabavani-shankar-tweet-about-arunraja-kamaraj-wife-d

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் கோரதாண்டவமாடி வரும்நிலையில், சாமானிய மக்கள் முதல் அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் என பலரும் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகின்றனர். அதுமட்டுமின்றி இளம்வயதினர் முதல் வயதானவர்கள் வரை பலரும் துயரமும் நேர்ந்து வருகிறது.

இந்த நிலையில் பாடலாசிரியர், பாடகர், நடிகர், இயக்குநர் என பன்முகத் திறமை கொண்டு விளங்கி வரும் அருண்ராஜா காமராஜ் மற்றும் அவரது மனைவி சிந்துஜா இருவரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அருண்ராஜா காமராஜ் அவர்களின் மனைவி உயிரிழந்தார். அவரது மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து நடிகை பிரியா பவானி சங்கர் வெளியிட்ட பதிவில், இது ரொம்ப வருத்தம் அளிக்கிறது. ஒவ்வொரு வாழ்க்கையும் விட்டுச்செல்லும் சோகமான செய்தி இது. தற்போது யாருக்கு வேணும்னாலும் இது நிகழலாம். நீங்கள், நான், நம் அன்புக்குரியவர்கள், பணக்காரர்கள், ஏழைகள், என யாருக்கும் ஏற்படக்கூடும். தயவுசெய்து பாதுகாப்பாக இருங்கள். இப்படி ஒன்று நடந்திருக்கவே கூடாது. அருண்ராஜாவுக்கு வலிமையும், தைரியமும் கொடுக்க கடவுளை மனதார வேண்டுகிறேன் என பதிவிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து பலரும் அருண்ராஜா காமராஜ் மனைவியின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.