14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு பின் மனைவி, மகளுடன் சேர்ந்த நடிகர் பிரித்விராஜ்! வைரலாகும் கியூட் புகைப்படம்!

14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு பின் மனைவி, மகளுடன் சேர்ந்த நடிகர் பிரித்விராஜ்! வைரலாகும் கியூட் புகைப்படம்!


prithviraj-joint-with-family-after-quarantine

தமிழ் சினிமாவில் மொழி, கனா கண்டேன், சத்தம் போடாதே, வெள்ளித்திரை, நினைத்தாலே இனிக்கும் உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் பிருத்விராஜ். இவர் ஏராளமான மலையாள சினிமாவில் நடித்து முன்னணி நடிகராக உள்ளார்.

நடிகர் பிரித்விராஜ் தற்போது ஆடு ஜீவிதம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு ஜோர்டானில் உள்ள வாடிரம் பாலைவனப் பகுதியில் நடைபெற்றது. அப்பொழுது கொரோனா பரவலால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, விமானங்கள் முடக்கப்பட்டதால் பிருத்விராஜ்  உட்பட 57 பேர் கொண்ட குழு ஊருக்கு திரும்பமுடியாமல் ஜோர்டான் பகுதியில் தவித்து வந்தனர்.

Prithviraj
அதனை தொடர்ந்து கடந்த மாதம் இறுதியில் அவர்களை மீட்க மத்திய அரசு சிறப்பு விமானத்தை அனுப்பியது. இந்த விமானத்தில் பிரித்விராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் நாடு திரும்பினர்.பின்னர் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.

 இந்நிலையில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பிரபல நடிகர் பிரித்விராஜ் கொரோனா பாதிப்பு எதுவும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்ட நிலையில்,  தனது குடும்பத்துடன் சேர்ந்துள்ளார். இந்நிலையில் அவர் தனது மனைவி மற்றும் மகளுடன் இருக்கும் புகைப்படத்தை மிகவும் உற்சாகத்துடன் reunited என  பதிவிட்டு இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். 

View this post on Instagram

Reunited 👨‍👩‍👧 ❤️

A post shared by Prithviraj Sukumaran (@therealprithvi) on